ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.

Thursday 15 December 2011

வாசகர் கடிதப் போட்டி - மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்


"என்னபா எவ்ளோ சிக்கலான விதிமுறைங்கள வச்சிருக்கீங்க... இதுக்கு ஒரு 10 வாசகர் கடிதம் வந்தாலே உங்க முயற்சி வெற்றின்னு நெனச்சிக்கோங்க"

வாசகர் கடிதப் போட்டி அறிவித்த உடனேயே சாம் மார்த்தாண்டனுக்கு ட்வீட்டரில் வந்த போன் கால்கள் இந்த செய்தியைத்தான் தந்தன.

ஆனால் அவ்வாறு கேட்டவர்கள் முகத்தில் கரியை அள்ளி பூசியிருக்கிறது ரசிகர்கள் இந்தவாசகர்  கடிதப்போட்டிக்கு தந்த ஆதரவு. இதுவரை சுமார் இரண்டு லட்சத்து இருபத்து எழாயிரத்து ஐநூற்று நாற்பது (2,27,540) வாசகர் கடிதங்கள் வந்து குவிந்துள்ளன.

இவை அனைத்தும் போட்டி விதிமுறைக்கு உட்பட்டு சரியான நேரத்தில் அனுப்பப்பட்ட கடிதங்கள். இது தவிற விதிமுறையை தாண்டி ஜெட்லியை கயிவி கயிவி ஊற்றி எழுதப்பட்ட சுமார் மூன்று லட்சம் கடிதங்களும், நேற்று 12 மணிக்கு பிறகு 2 மைக்ரோ செகண்டுகள் தாண்டி வந்த சுமார் எழுபத்தைந்தாயிரம் கடிதங்களும் போட்டியிலிருந்து நிராகரிக்கப்ப்ட்டுள்ளன.

இவற்றில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஜெட்லிக்கு உள்ளூர் ரசிகர்களை விட அயல்நாட்டு ரசிகர்களிடமிருந்தே அதிக கடிதங்கள் வந்துள்ளன. குறிப்பாக உகாண்டா, ரவாண்டா, எத்யோப்பியா, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டிஸ் போன்ற நாடுகளிலிருந்து வந்திருக்கும் கடிதங்கள் மட்டும் ஒரு லட்சத்தை தாண்டும்.

இதோடு மட்டுமல்லாமல், திருவள்ளுவர், கம்பர், ஒட்டக்கூத்தர், போதி தர்மர், ஆப்ரகாம் லிங்கன், நெல்சன் மண்டேலா, சதாம் உசேன், சாலமன் பாப்பையா, கலைஞர் போன்றோரும் இந்த வாசகர் கடித போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டது காலம் கடந்து ஜெட்லியின் எழுத்தாற்றலுக்கு இருக்கும் சக்தியை நிரூபித்து காட்டுகிறது.

எனவே கடிதங்களை அலசி ஆராய்ந்து பரிசு கொடுக்க வேண்டும் என முடிவு செய்தால் அடுத்த ஆண்டு மட்டுமே முடிவுகளை வெளியிட முடியும் என்ற காரணத்தால், குலுக்கல் முறையில் மூன்று கடிதங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றன. பதிவின் நீளம் கருதி மூன்றாம் பரிசு பெற்ற கடிதம் தற்பொழுது உங்களுக்காக. முதல் இரண்டு கடிதங்கள் அடுத்த பதிவில்.

வெற்றி பெற்ற அனைவருக்கும் சாம் மார்த்தாண்டன் சார்பாகவும், உடான்ஸ் வரட்டி ச்ச திரட்டி சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். போட்டியில் வெற்றி பெறாதவர்கள் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் சென்று விட வேண்டாம். அடுத்த வருடமும் உங்களுக்காக போட்டி நிச்சயம் உண்டு.

மூண்றாம் பரிசு:

கடிதத்தை எழுதியவர் : திரு பாண பத்திர ஓணாண்டி


ஜெட்லி! மா ஜெட்லி!! நீ ஒரு மாமா ஜெட்லி!!!

பூ மாரி தேன் மாரி நான் பொழியும் நீ ஒரு மொள்ளமாறி!!

பதிவுலகில் நீ தெள்ளியதோர் முடிச்சவிக்கி !!

தேடிவரும் பதிவர்களுக்கு நீ மூடா!!

நெடும் பதிவு உன் பதிவு

என்றும் மூடாமல் மறைக்காமல் நீ உதவு

எதிர்த்து நிற்கும் அனானிகளை நீ புண்ணாக்கு

மண்ணோடு மண்ணாக்கு !!

இந்த பதிவுலகை அடை காக்கும் அண்டங்காக்கையே !!

ஆயிரம் பதிவு கண்ட அபூர்வ சிந்தாமணியே.!!

நீர் வாழ்க! உன் பதிவுகள் வாழ்க!!!

Tuesday 13 December 2011

பிருந்தாவனமும் பிட்டுகுமாரனும் - சாம் உருவான கதை

மருதமலையில வர்ற இந்த காமெடி சீன் யாருக்காவது ஞாபகம் இல்லைன்னா ஒரு முறை இந்த காணொளியை பாத்துட்டு பதிவை படிக்குமாறு கேட்டுக்கொள்வது உங்கள் சாம்.





சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு: த ப்ளாஸ் பேக்

இங்க வடிவேலு கேரக்டர்ல நம்ம ஜெட்லி, மகாநதி சங்கர் கேரக்டர்ல சாம்.

ஜெட்லி ஒரு திருட்டு விசிடி கடையில நின்னு

"ஏன்பா... டக்குன்னு குடுப்பா.... நேத்து குடுத்தா மாதிரி எதுவும் குடுத்துராத.. அதுல ஒரு பிட்டு கூட இல்ல.. நல்ல பேமிலியோட உக்காந்து பாக்குற மாதிரி பிட்டு படம் எதாவதுஇருந்தா குடு"

அப்போ சாம் ஆட்டோலருந்து எறங்கி வர்றாரு.

சாம்: இந்தாங்கஜெட்லி  தொட்டு கும்புட்டுக்குங்க...

ஜெட்லி : ஆமா என்னப்பா இது...

சாம்: சகிலா பட சிடிண்ணே

ஜெட்லி : அப்புடியா... சகீலா...சகிலா... சகிலா... (கண்ணுல ஒத்திக்கிறாரு) ஆமா யாரு ராஜா நீ?

சாம்: என்னண்ணே என்னை தெரியலையா... நா உங்கள அடிச்சிருக்கேனே...

ஜெட்லி : அடிச்சிருக்கியா... எப்பம்மா....

சாம் : நல்லா யோசிச்சி பாருங்க...

ஜெட்லி : இந்த ஈரோடு பதிவர் சந்திப்புல ஒரு புள்ளைய இடுப்ப புடிச்சி கிள்ளுனதுக்காக மொத்த பயலுகலும் சேந்து கும்மி எடுத்தீங்களே அந்த குரூப்பா..
..
சாம்: இல்லைண்ணே...

ஜெட்லி : இந்த பேங்களூரு ட்ரெயின்ல போகும் போது ஒரு எதுக்க உக்காந்துருந்த புள்ளைய வெறிக்க வெறிக்க பாத்ததுக்காக கக்கூசுக்குள்ளயே வச்சி வெறித்தனமா மிதிச்சீங்களே,,, அந்த
குரூப்பா...

சாம் : அட இல்லைண்ணே...

ஜெட்லி : என்னடா இதுவும் இல்லைங்குற... ஒரு எடம் ரெண்டு எடமா இருந்தா ஞாபகம் இருக்கும்ஒராயிரம் எடத்துல வாங்கிருக்கோம்...ஆஆஆங்.. இந்த இந்திய வரைபடத்துல
இங்கிலாந்துக்கு போகும் போது ஒரு பிள்ளை குளிச்சத லைட்டா எட்டி பாத்ததுக்கு ஒரு 15 பேரு என்ன ஒரு மூத்தர சந்துக்குள்ள வச்சி கொன்னு எடுத்துதீங்களே அந்த குருப்பு தான நீயி....

சாம்: ஹா ஹா... கரெக்டா கண்டுபுடிச்சிட்டீங்கண்ணே...

ஜெட்லி : டேய் நீங்க அடிச்சப்புறம் வேற எவன் அடிச்சாலும் அத தாங்குற சக்தி வந்துருச்சிடா எனக்கு.. அப்புடி ஒரு அடி

சாம் : ஆமாணே... அவள அடியையும் வாங்க்கிட்டு நீங்க இப்புடி உசுரோட நடமாடுரீங்கன்னா அது எவ்வளவு ஆச்சர்யம்...

ஜெட்லி : அதுனால தானடா என்ன எல்லாரும் ரொம்ப நல்லவன்னு சொல்றாய்ங்க. ஆமாநீ எப்புடி ராஜா இருக்க...

சாம் : நா அப்புடியே தான்னே இருக்கேன்.. ஆனா என்னோட சேந்து உங்கள அடிச்சானுங்களே ஒயர் சங்கரு.. ஒயின்சாப் ப்ரபா அவனுங்க ரெண்டு பேரும் இப்ப பெரிய பதிவரா ஆயிட்டானுங்க

ஜெட்லி : (ஹை பிட்ச்) நான்சென்ஸ்.. எப்புடிடா பதிவர் ஆனானுங்க... எப்புடி ஆனானுங்க அம்புட்டு பயலும் என்னைய தூக்கி போட்டு அடிச்சதாலதாண்டா பெரியாளா ஆனானுங்க. ஒயரு சங்கருன்னு சொன்னியே... அவன் கதைய சொல்றேன் கேளு. அவன் ஒரு நாளைக்கு 10 ரோலு ஒயரு விப்பான்... அப்ப கூட அவனுக்கு ஒயரு சங்கருன்னு பேரு வரல.. ஒரு நாளூ ஒரு பிட்டு படம் பாத்தப்ப டிஸ்டப் பண்ணிட்டான்னு அவன கெட்ட வார்த்தையில திட்டிட்டேன்... அஞ்சு வார்த்தை தாண்டா சொன்னேன்.... படக்குன்னு கைல வச்சிருந்த ஒயர கழுத்துல போட்டு இறுக்கிட்டான்....

சாம் : அய்யோ அப்புறம்...

ஜெட்லி : கண்ணு முழி ரெண்டும் பிதுங்கி வெளில வந்துருச்சி... அப்புறம் அவன் கால புடிச்சி கெஞ்சுன அப்புறம் தான் விட்டான்... ஜெட்லி கழுத்துலயே ஒயர போட்டு நெறிச்சிட்டான்னு அன்னையிலருந்து அவன் ஒயரு சங்கரு ஒயரு சங்கருன்னு ஊருக்குள்ள பேமஸ் ஆயிட்டான்

அப்புறம் இந்த ஒயின்சாப் ப்ரபா... ஒயரு சங்கர மாதிரியே இவனையும் ஒருநாளு ஒயின்சாப்புல பாத்தேன்... எதோ போதையில லைட்டா கெட்ட வார்த்தையில திட்டிட்டேன்... ரெண்டு வார்த்தை தாண்டா திட்டுனேன். அவன் என்ன கோவத்துல இருந்தான்னு தெரியல பொசுக்குன்னு கைல இருந்த பாட்டில ஒடச்சி மூஞ்சி முன்னாடி நீட்டிடான்...

சாம் :அய்யோ அப்புறம்...

ஜெட்லி : நா அப்புடியே சாக் ஆயிட்டேன்.. அப்புறம் விட்டேன் பாரு ஒட்டம்.. பேண்டு அவுந்து விழுந்தத கூட நா கண்டுக்கலயே...அப்புடி ஒரு ஓட்டம்... அப்புடி இருந்தும் சாட் ரூட்டுல வந்து விட்டான் பாரு  மண்டையில.. மண்டை ரெண்டா பொளந்துருச்சி....

சாம்: அப்புறம் என்னாச்சி..

ஜெட்லி : அப்புறம் என்ன... ரத்தத தொடைச்சிகிட்டு திரும்பவும் ஓட்டம்தான்... அன்னையிலந்துதான் ஜெட்லியையே மண்டைய ஒடச்சி மாவலக்கு போட்டுட்டான்னு ஒயின்சாப் ப்ரபா ஒயின் சாப் ப்ரபான்னு ஒரே பேரு... ஆனா ரெண்டு பேரும் விசுவாசிடா... ஒயர் சங்கர் இருக்கான் பாரு நா எப்ப போஸ்டு போட்டாலும் உன்னால தான் பெரிய பதிவர் ஆனேன்னு சொல்லி ஒரு ஓட்டும் கமெண்டும் போட்டுட்டு போவான்.. இந்த ஒயின்சாப் பையன் இன்னும் ஒரு படி மேலடா... வாரம் ஒரு வாசகர் கடிதம் கேக்காமையே அனுப்பிருவான்.. சரித்திரம்  இப்புடி இருக்கும் போது என்கிட்டயே வந்து பெரிய பதிவர் ஆயிட்டான் பெரிய பதிவர் ஆயிட்டான்னுபெருசா பீத்திக்கிற....சரி நீ இப்ப என் இங்க வந்த.. உன் பொழப்பெல்லாம் எப்புடி போகுது....

சாம் : என்னத்த ஜெட்லிண்ணே... பதிவருங்க எண்ணிக்கை வேற அதிகமாயிருச்சி.. காலம் மாறி போச்சில்ல.. படிச்சவன் புக்குல படிக்கிறத போஸ்டா போட்டு ஹிட்டு வாங்குறான்.நா படிக்காதவன்... பதிவுலகதுல நிக்க முடியலையே... என்னதான் தமிழ்மணம், இன்ட்லினு நல்ல போஸ்டு போட்டாலும் யாரும் படிக்க மாட்டேங்குறாங்க... அதுனால தான்
நான் ஒரு முடிவு பண்ணிட்டேன்.

ஜெட்லி : என்னான்னு...

சாம் :நானும் பெரிய பதிவரா மாறி ப்ளாக் நெறைய ஹிட்ஸ் வாங்கணும்னு முடிவு பண்ணிட்டேன்.

ஜெட்லி : வாங்கணும்டா வாங்கனும்..

சாம் : நா இப்ப என்ன பண்ண போறேன்னா உங்க மூக்குலயே நச்சுன்னு குத்துவேணாம்..பொல பொலன்னு ரத்தம் வரும்...அத அப்புடியே போட்டோ எடுத்து என் ப்ளாக்ல போட்டு சென்டி மெண்ட் பதிவு எழுதி நானும் பெரிய பதிவரா ஆயிருவேண்ல...

ஜெட்லி : டேய் அப்ப நீயும் என்ன அடிச்சி பேமஸ் ஆகலாம்னு பாக்குற.

சாம் : நீங்க ரொம்ப ராசியான ஆளு ஜெட்லிண்ணே

ஜெட்லி : சரி நா உன்கிட்ட அடி வாங்குனா ஜெட்லிக்கு அண்ணனுக்கு நீ என்ன செய்வ?

சாம் : என்னண்ணே இப்புடி கேட்டுட்டீங்க... ஒரு வருஷத்துக்கு உள்ள வாசகர் கடிதத்தஒண்ணா எழுதி குடுத்தறேன்

ஜெட்லி : ஹி ஹி நல்லவண்டா நீ... சரி அப்ப நா சொல்றத செய்... நல்ல கூட்டமா உள்ள பிட்டு படம் ஓடுற தியேட்டருக்கு என்ன கூட்டிட்டு போயி அத்தன பேருக்கு முன்னாடியும் என்ன கும்மி எடு.. அப்பதான் பிட்டு பட தியேட்டர் முன்னாலயே ஜெட்லி அடிச்சிட்டான்னு நீ வேல்டு புல்லா ரீச் ஆவ

அவரு சொன்ன மாதிரியே அவர கும்மி எடுத்து, ஜெட்லியின் ஆசீர்வாதத்தோடு ஆரம்பிக்க பட்டதுதான் இந்த சாம் மார்த்தாண்டன் பதிவுகள்.


EVER EVERS



Saturday 3 December 2011

ஜெட்லி மற்றும் உடான்ஸ் இணைந்து நடத்தும் வாசகர் கடிதப்போட்டி-2011

சென்ற நூற்றாண்டில் நான் யாருக்கோ அலை பேசிய போது "நான் உங்கள் வாசகன்" என்னும் பொறி காதில் விழ, வாசகர் கடிதம் என்ற ஒரு பகுதியை என் பதிவில் ஒதுக்கி, அதற்கு  நேரமும் ஒதுக்கி இடைவிடாமல் நானே எழுதி வருகிறேன்.

அது போக 75 வருடங்களுக்கு முன்னால் நான் எங்கள் வீட்டு வெஸ்டர்ன் டாய்லெட்டில் உக்காந்து கன நேரம் யோசித்த போது, தோன்றிய ஐடியாதான் வாசகர் கடித போட்டி.நமக்கு நாமே வாசகர் கடிதம் எழுதி களைத்து போவதை விட, இதை ஒரு போட்டியாக வைத்து பரிசும் வழங்கினால் நன்றாக இருக்குமே என்று யோசித்ததன் விளைவுதான் இந்த வாசகர் கடிதப்போட்டி. இதற்காக ஒவ்வொரு வருடமும் தாங்கள் அளித்து வரும் பேராதரவுக்கு மிக்க நன்றி.

சென்ற வருட போட்டி பதிவுலகில் சிறு சலசலப்பை உண்டு பண்ணியது என்றே கூறலாம்.  வந்து சேர்ந்த வாசகர் கடிதங்களின் எண்ணிக்கையில், முதல் மூன்று கடிதங்களை தேர்ந்தெடுப்பதே பெரும் பாடாகிவிட்டது. ஏனென்றால் மொத்தம் இரண்டு கடிதங்கள் வந்திருந்தன. அவற்றில் முதல் மூன்று கடிதங்களை தேர்ந்தெடுக்க நடுவர்கள் கிட்ட தட்ட திணறிப் போய்விட்டனர் என்றே கூறலாம். கடைசியில் அந்த இரண்டு கடிதங்களை எழுதிய எனக்கே மூன்று பரிசுகளையும்  தந்துவிட்டார்கள்

சென்ற முறை போட்டியின் விதி முறைகள் கடுமையாக இருந்தது எனவும், அவை இந்த  முறை எளிமையாக்கப்பட வேண்டும் எனவும் பலர் டிவீட்டரில் எனக்கு போன் செய்தனர்.அடுத்த கடிதப்போட்டி எப்போது எப்போது எனவும் சில நண்பர்கள் ஆவலுடன் என்னிடம் பஸ்ஸில் (MTC) கேட்டிருந்தனர்.

எனவே வருடம் ஒரு முறை இந்த வாசகர் கடித போட்டி வைக்க வேண்டும் என முடிவு  செய்தேன். இதோ 125 ம் ஆண்டு வாசகர் கடித போட்டியின் அறிவிப்பு..

முன்னதாக ஒரு கூடுதல் தகவல். சமீபத்தில் "டுபாகூர்களால் டுபாகூர்களுக்காக" என்ற கேப்சனுடன் இயங்கி வரும் உடான்ஸ் (www.odanz.com) என்னும் ஆங்கில தமிழ் வலைத்திரட்டியைஅறிவீர்கள். அதன் உரிமையாளர் DTH சங்கரும் முனைப்போடு இந்த வாசகர் கடித போட்டியை  உடான்ஸுடன் இணைந்து நடத்தும் படி கேட்டுக்கொண்டார்.அதன்படி உடான்ஸ் ஆங்கில தமிழ் வலைத்திரட்டியுடன் இணைந்து இந்த வாசகர் கடித போட்டியை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

ஆங்காங்கே இருக்கும் பொது மக்களும், பக்த கோடிகளும் பெருந்திரளாக வந்து  விழாவை சிறப்பித்து தருமாறு தங்கள் வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்.

அன்புடன்

-ஜெட்லி



இதோ வாசகர் கடிதப்போட்டிக்கான விதிமுறைகள்:


1. வாசகர் கடிதம் எழுதும் நபர் குறைந்த பட்சம் 45 ஆண்டுகளாவது ஜெட்லியின் வாசகராக இருந்திருக்க வேண்டும்.

2.உங்கள் கடிதத்தை வெளியிடுமாறு நீங்கள் கெஞ்சுவது போன்ற வரிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்

3. முக்கியமான ப்ரச்சனைகளுக்கு உதாரணமாக, முல்லை பெரியாறு அணை ப்ரச்சனை, கூடங்குளம் உலை ப்ரச்சனை போன்றவற்றை பற்றி ஜெட்லி எழுதிய பதிவுகளை அரசு பின்பற்றினால் இந்தியா வல்லரசாக மாறிவிடும் என்பது போலான வரிகள் இருப்பின் 15 மதிப்பெண்கள் அதிகமாக வழங்கப்படும்.

4.அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சென்றுவர தங்களிடம் ஒரு டிக்கெட் extra வாக இருக்கின்றது (இல்லாவிட்டாலும்) எனவும், அதில் பயணம் செய்ய  ஜெட்லியை நீங்கள் அழைப்பது போலவும் எழுதியிருக்க வேண்டும். (கவலை வேண்டாம் ஜெட்லி கண்டிப்பாக அதை மறுத்து விடுவார்)

5. ஜெட்லியின் செண்டிமெண்ட் பதிவுகளை படித்துவிட்டு தாங்கள் கதறி கதறி அழுபவராக இருக்க வேண்டும். ஒருவேளை போலியாக தாங்கள் போட்டியில் பங்கு கொண்டு வெற்றி பெற்று விட்டால், பரிசளிக்கும் போது அந்த செண்டிமெண்ட் பதிவுகளை படித்துக் காட்டி தங்களுக்கு அழுகை வருகிறதா என்பது சோதிக்கப்படும்.

6. அனானிகளை திட்டி, ஜெட்லியை ஊக்கப்படுத்தும் விதமான வரிகள் கண்டிப்பாக இரண்டாவது இடம்பெற வேண்டும்.

7. வாசர் கடிதத்தின் களம் நகைச்சுவை செண்டிமெண்ட் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.ஆனால் வாசகர் கடிதம் நகைச்சுவையாக இருக்கவேண்டும்.

8. வலைப்பூ  வைத்திருக்கும் பதிவர்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ரோஜாப்பூ, மல்லிகைப்பூ, குஷ்பூ போன்றவற்றை வைத்திருக்கும் நபர்கள் கூட பங்குபெறலாம்.

9. நீங்கள் எழுதும் வாசகர் கடித்ததிற்கு மேல் "வாசகர் கடிதப்போட்டி-2011" என்று அடைப்பு குறிக்குள் இட வேண்டும். அடைப்புக்குறி இல்லாத கடிதங்கள் போட்டிக்கு எடுத்துக்கொள்ள பட மாட்டாது.

10. வாசகர் கடித போட்டி-2011ற்கான புகைப்படத்தை தங்கள் வலைப்பதிவின் எதாவது ஒரு ஓரத்தில் போட்டுக்கொள்ளுதல் உசிதம். அதற்கு தனியாக மதிப்பெண்கள் உண்டு

11.ஒருவர் அதிக பட்சமாக 3020 வாசகர் கடிதங்கள் எழுதலாம்.

12. இந்த வாசகர் கடிதம் உங்கள் கற்பனையில் உருவானது அல்ல எனவும், உண்மையின் வெளிப்பாடே எனவும், வேறு எந்த பதிவருக்கும் இந்த வாசகர் கடிதம் அனுப்பப்பட வில்லைஎன்ற உறுதிமொழியையும் mydearmarthaandan@rediffmail.com க்கு speed courier இல் அனுப்பி விடவும்

13.மேலும் உங்கள் கடிததின் தொடுப்பை உடான்ஸ் திரட்டியில் உள்ள வாசகர் கடிதப்போட்டி 2011 என்ற வகையீட்டில் இணைக்கப்படல் வேண்டும். ஒருவேளை உடான்ஸில் "வாசகர் கடித போட்டி-2011" என்ற வகையீடு இல்லாவிட்டால் ,அந்த பெயரில் ஒரு வகையீட்டினை உருவாக்கி பின் அதில் இணைக்க வேண்டும்

14. வெற்றி பெறும் கடிதங்கள் பக்கி லீக்ஸில் வெளியிடப்படுவதோடு அல்லாமல் தின கரன், தின தந்தி, தினமலர், ராணி, குமுதம் போன்ற இதழ்களிலிலும் வெளியிடப்படும்.

15. கடிதங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி டிசம்பர் 15. அண்டார்டிகா நேரப்படி இரவு 12 மணி.


வாழ்த்துக்கள்.

Saturday 5 November 2011

அன்புள்ள கடாஃபிக்கு சாம் எழுதுவது



அன்புள்ள கடாஃபிக்கு கடலூர்க்காரன் எழுதுவது. 

அன்புள்ள லேட் கறிக்கடை சேட் அப்துல்ரகீம் அவர்களின் மகன் லேட் கடாஃபி அவர்களுக்கு,


வணக்கம் வாலிய நலம்...


லிபியாவில் நீங்கள் முதல் முறையாக சாகின்றீர்கள்.. வாழ்த்துகள்..


நான் கரகாட்டக்காரன்.... ....சீ.... கடலூர்க்காரன்..


இப்போதைக்கு செத்துப் போனதன் காரணமாக ஒரு விஷயத்தை நீங்கள் மறந்து போய் இருக்கலாம்.. 1932ல் எங்கள் ஊர் கடலூரில் சதாம் உசேன் தலைமையில் நடந்த 'சாண்வெஜ் நாண்வெஜ்' மாநாட்டில் கொள்கை பரப்பு செயலராக உங்களை நியமித்து, உங்கள் அரசியல் பயணத்தை தொடங்கி வைத்தார்... 

அன்றைய தினம் நீங்கள் பச்சை பேண்டும் பச்சை சட்டையும் அணிந்திருந்தீர்கள். கருப்பு நிற பெல்ட் அணிந்திருந்தீர்கள். பின் ஊர்வலமாக சென்று மாநாடு நடந்த மஞ்சை நகர் மைதானத்தை அடைந்தீர்கள்... உங்கள் கார் 'டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' என சத்தம் எழுப்பியவாறே ஓடியது. அப்போதும் அனானிகளுடன்தான் நீங்கள் அந்த பயணத்தை தொடங்கினீர்கள்.. நான் சிறுவன் என்பதாலும் நான் சின்னப்பையன் என்பதாலும் நான் சிறுபையன் என்பதாலும் அன்று வானம் அடர்த்தியுடன் காணப்பட்டதாலும், சென்னையில் மழை பெய்ததாலும், மும்பையில் மழை பெய்ததாலும், நான் முதலில் அன்று குளித்ததாலும்  எங்களுக்கு ஒரே மகிழ்ச்சி உற்சாகம்... அந்த இடத்தை நீங்கள் மறந்து போய் இருக்கலாம்.. ஆனால் அந்த இடத்தில் நான் விளக்குமாற்று குச்சி வைத்து மார்க் செய்திருக்கிறேன். நான் அப்போது உற்சாகமாக கையசைத்து உங்களை வழி அனுப்பி வைத்ததுதான் உங்கள் அரசியல் வெற்றிக்கு காரணம் என ட்விட்டரில் சொல்லியிருந்தீர்கள்... 


அதே மாநாட்டுக்கு என் ஆயா அழைத்து கொண்டு போனதால் நான் அதில் கலந்து கொண்டேன்.. அதே மாநாட்டுக்கு உங்கள் ஆயாவை நீங்கள் அழைத்து போகாததால் அவர் கலந்துகொள்ளவில்லை. அதற்காக பலநாட்கள் நான் வருந்தியிருக்கிறேன். கலை நிகழ்ச்சியில் பரதநாட்டியம் எல்லாம் பாடினீர்கள்.. நானும் அப்போது ஆடினேன். ஆனால் என்னை அடித்து விரட்டிவிட்டார்கள். 


நீங்கள் கடாபி. நான் சாதாரணமானவன். ஒரு லோக்கல். நான் அறிவுரை சொல்கிரேன் என நினைக்காதீர்கள். ஓடிப்பிடித்து விளையாடும்போது கண்டிப்பாக அவுட் ஆக்கிவிடுவார்கள் என தெரிந்தும் லிபியாவில் ஏன் ஒளிந்தீர்கள்? துபாய், ஜப்பான், இஸ்லாமாபாத் போன்ற தென்னிந்திய நாடுகளில் ஒளிந்திருந்தால் நீங்கள் ஜெயித்திருக்கலாம்.

ஆனால் யூடியூபில் நீங்கள் அவுட் ஆகும் காட்சி பார்த்தேன். மீண்டும் மீண்டும் பார்த்தால் ஒருமுறையாவது தப்பிப்பீர்கள் என நினைத்து மறுபடியும் பார்த்தேன். ஆனால் அவுட் ஆகி கொண்டே இருந்தீர்கள். மன்சாட்சி உள்ளவர்கள் யாரும் அப்படி செய்யமாட்டார்கள்.

நீங்கள் என்ன கட்டினீர்கள்? பெயர் சொல்லி சொல்லுங்கள். மேலுரில் ஒன்று, அரேபியாவில் ஒன்று, புதுக்கோட்டையில் ஒன்று என்று சொல்லாதீர்கள். பெயர் சொல்லுங்கள். கமலாவா, விமலாவா, மாலாவா, கோலாவா? சொல்லமுடியாது. ஏனென்றால் இன்று செவ்வாய்க்கிழமை.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் நான் ஒரு லோக்கல். ஆனால் நான் 
கடலூரில் இருந்து விமான மார்கமாக சென்னை வந்து பிரபல எழுத்தாளன் ஆகிவிட்டேன். "தமிளில் பிலையின்றி எலுதுவது எப்பீடி" என ஒரு புத்தகம் எழுதி பெரிய ஆல் ஆகிவிட்டேன். இன்று நான் கையசைத்தால் ஓடிவர வலையுலகில் ஏராளமான தம்பிகள் உண்டு. ஆனால் நீங்களோ செத்துப்போய்விட்டீர்கள். பரவாயில்லை. இந்த் கடிதத்தை படிங்கள்.
நீங்கள் பனகல் பார்க்கில் மெத்தை விற்பவர். நான் அப்படி அல்ல. ஜூராசிக் பார்க்கில் சுண்டல் விற்பவன். எதோ எனக்கு தெரிந்ததை எழுதியிருக்கிறேன்.
மனதில் வையுங்கள். 


பிரியங்காவுடன்
சாம் மார்த்தாண்டன்.


நான் அல்ல நீ..... அவன் அல்ல நீ..... இவன் அல்ல நீ... நீ என்பதே நீ....

EVER YOURS...




ஆங்கிலப் கற்கலாம் வாங்க: 
             

Man is man. man is not woman. heman is cartoon. superman is good. batman is not superman. thats all man. hanuman. we cook they eat. they cook we not eat. but anniversary silk saree forgot. very bad. they love we love. human nature.
 

Tuesday 1 November 2011

ரிட்டர்ன் ஆஃப் தி சாம்: "ஏன் ஆங்கிலம்?" மனம் திறக்கிறார் சாம் மார்த்தாண்டன்.

வணக்கம் நண்பர்களே. என் இங்கிலாந்து டூரை முடித்துவிட்டு நேற்றுதான் சென்னை வந்தேன். சென்னையில் மழை பெய்கிறது. அதை நான் எப்படி கண்டுபிடித்தேன் என்பதுதான் சுவாரசியம். ரோடெல்லாம் ஈரமாக இருந்தது, அதை வைத்து கண்டுபுடித்தேன். இதை அறிந்த கோவில்பட்டு வாசகர் கோக்குமாக்கு ரவி என்னை வெகுநேரம் ட்விட்டரில் புகழ்ந்தார். அவருக்கு நன்றி.
 
ஆங்கில ப்ளாக் ஒன்று ஆரம்பிக்கலாம் என இருந்தேன். ஆனால் உங்களுக்கே தெரியும் நான் ஒரு எஸ்.டி.டி. அதனால் என்னிடம் வசதி இல்லை. இப்போது இதே ப்ளாக்கில் ஆங்கில சேவையும் செய்யப்போகிறேன். 

இன்றைய நாளில் ஆங்கிலம் வெகுவாக வளர்ந்துவிட்டது. முன்பெல்லாம் நாங்கள் படிக்கும் போது "abcd" தான் இருந்தது. இப்போது A முதல் Zவரை இருக்கிறதாம். என்ன கொடுமை பாருங்கள். அதனால் நானும் ஆங்கில சேவை செய்ய இறங்கிவிட்டேன். என் தாய்மொழி தமிழ்தான். ஆனால் என் முகத்தை இரண்டு நிமிடம் தொடர்ந்து ஊடுருவி நீங்கள் பார்த்தால் அதில் ஒரு ஆங்கிலேயக் கலை ஓடும். ஆம்! என் தந்தை ஒரு ஆங்கிலேயர். 1900களில் கட்டப்பஞ்சாயத்து செய்த வந்த வீரபாண்டிய ஆங்கிலேயர் அவர். அவருக்கு வெகுநாட்களாகவே நான் ஆங்கிலத்தில் எழுதாது குறித்து வருத்தம்.  ஹி க்ரை. ஐ க்ரை. சோ ப்ளாக் ஸ்டார்ட். இங்கிலிஸ் இன் மய் ப்ளட். அமெரிக்கன் இங்லிஷ். ப்ரிட்டைன் இங்கிலிஸ் போத் ஐ னோ.

ஒருவகையில் ஆங்கில எழுத்தாளர்கள் ஷாக்ஸ்பியர், அர்னால்டு, ஜெட்லி சேகர் எல்லாம் எங்கள் தூரத்து சொந்தம். ஷாக்ஸ்பியர் தவறமால் எங்கள் நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொள்வார். ஹி இஸ் எ க்ரேட் மேன்.

என் முதல் ஆங்கிலப் பதிவை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
 
Heading: SORRY

After long long ago once upon a time in irunda  aaprica i had one prend. he was very taal. very old boy he was. when we all very small he bite my dicky. very pain i cry mummy come. he no maturity. bad boy bad boy. very bad boy that boy. mummy apply medicine in dicky. pain pain go away little sam want to play. then pain go.. prend come. he tel sorry. i tell ok. we again prends.
 
 

பிரியங்காவுடன்
சாம் மார்த்தாண்டன்.


பெண்ணை பார்ப்பது அல்ல நீ..... கையை பிடித்து இழுத்து செருப்படி வாங்குவதே நீ.....

EVER YOURS...



Tuesday 6 September 2011

ஆண்வெஜ் பெண்வெஜ் 3நிமிடம் 30நொடி தாமதமாக (06/09/2011)


ஆல்பம்:

சென்னையில் மழைக்காலத்தில் மழை பெய்வது வியப்பாக உள்ளது. பெண்களூரில் ரெய்னி சீசனில் மழை பெய்வதாக பேசிக்கொண்டார்கள். இதுகுறித்து ஐநாசபைக்கு ட்வீட் செய்திருக்கிறேன். சென்னையை சரிசெய்கிறார்களா பார்க்கலாம்.
=============

மங்காத்தா படத்தைப் பத்தி இப்போதுதான் எழுதினேன்... அதற்குள் அதை வெங்கெட் பிரபு இயக்கி, அஜீத் நடித்து வெளியிட்டுவிட்டார்கள். மங்காத்தா படத்தைப் பற்றி தெரிந்து கொண்டீர்களா?
========

BBC சேனலின் செய்தி வாசிப்பாளர் அலக்ஜான்ட்ரியா எத்தனை முறை பதட்டத்தில் திக்கி தப்பாக செய்தி வாசித்தாலும்,ரசிக்கவே செய்கின்றேன். ஏனென்றால் அவர் சரியாக வாசித்தாலும் எனக்கு புரியாது.
==========


மிக்சர்: 

சென்னையில் பிசியான என் வீட்டு கூரையில் காக்கா ஒன்று கூடு கட்டியிருந்தது. "நிம்மதியா நான் உன்னை தூங்க கூட விடமாட்டேன்...நைட்ல கூட முழிச்சு வாசகர் கடிதம் எழுதுவேன்" என்றேன். காக்கை தலையில் ஆய் போய்விட்டு பரந்துவிட்டது. காக்கையே உன் சமத்து..
==========

சென்னையில் ராயப்பேட்டா அருகில் ஒரு ஓட்டலில் ப்ளாக் அண்ட் வைட் டிவி உள்ளது. அந்த டிவியில் கருப்பு வெள்ளை தவிர வேறு எந்த கலரும் வரவில்லை. ஓட்டல் முதலாளியிடம் சண்டை போட்டேன். ரெண்டு இட்லி கட்டிகொடுத்து வழியனுப்பினார்.
==========

வாசக நண்பர் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியை பெண்களூருவில் சந்தித்தேன். அவர் காசில் ஓசி டீ குடித்தது மனதுக்கு தெம்பாக இருந்தது. என் ரெஷ்யூம் கொடுத்தேன். கடலில் கப்பல் தள்ளும் வேலை வாங்கித்தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். நடக்கிறதா பார்க்கலாம்.
==========

நேற்று கடலூர் அருகில் இருக்கும் பிரியாணி கடையில் வாசக நண்பர் ராஜ்ஜை சந்தித்தேன். அவர் வாங்கி கொடுத்த பிரியாணியை ருசித்தபடியே பேசினோம். பின் பில் வந்தவுடன் லேசாக நிமிர்ந்து என்னை பார்த்தார். தலைதெறிக்க வெளியே ஓடிவந்து விட்டேன். வரவர உலகம், ரொம்ப கெட்டுவிட்டது.
==========

இந்த வாரம் பல வெளிக்கம்பனிகளுக்கு வாசகர் கடிதம் எழுதிக்கொடுக்கும் பனி நிறைய இருப்பதால் எனக்கு என்னால் எழுத முடியாமல் போய்விட்டது. அடுத்தவாரம் முடிகிறதா பார்க்கலாம்.
==========

டவுன் பஸ்ஸில் கண்டக்டர் எழுதியிருந்ததைப் படித்ததும் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. அதுவும் அவர் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமல் எழுதியிருந்ததுதான் ஹைலைட்.

அந்த செய்தி உங்களுக்காக

"டிக்கெட் எடுக்காத திருட்டுப்பயல்கள் வழியிலேயே இறக்கிவிடப்படுவார்கள்"

இதைப் படித்துவிட்டு பயங்கரமாக அழுதேன், தேம்பி தேம்பி அழுதேன்.
==========

இந்தவார சலனப்படம்:

நம்மூர் நடிகை காத்ரீனா கைப்பின் அண்ணன் மொகமது கைப் எப்படி கேட்ச் பிடிக்கிறார் பாருங்கள். லைவில்தான் அப்படி பிடித்தார் என்றால் ரீப்ளேவிலும் அதேபோல அவர் பந்தை பிடிப்பதுதான் ஹைலைட்.





==========
பிலாசபி பாண்டி

நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் டிவியின் தமிழ் மாலை.

 ==================== ====================


பிரியங்காவுடன்
சாம் மார்த்தாண்டன்.


பெண்ணை பார்ப்பது அல்ல நீ..... கையை பிடித்து இழுத்து செருப்படி வாங்குவதே நீ.....

EVER YOURS...

Sunday 4 September 2011

Mankatha (2011)/மங்காத்தா.. நால்வரில் மங்காத்தா யார்?... -ஜெட்லி சேகர்


அஜீத்தை எனக்கு ரொம்பவே பிடிக்கும்.. அவருக்கும் என்னை ரொம்ப பிடிக்கும். என் குறும்படங்களில் நடிக்க ஆவலாக இருப்பதாக கேள்விப்பட்டேன். முடிகிறதா பார்க்கலாம்.

ஜுராசிக் பார்க், லாஸ்ட் சாமுராய், பாட்ஷா போன்ற ஒரு சில அஜீத் படங்கள் பார்த்திருக்கிறேன். அப்போது எனக்கு டைப்பாய்டு ஜுரமே வந்து இருக்கின்றது... அப்போது ட்விட்டரில் நலம் விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நான் மிகவும் கொடுத்து வைத்தவன். அப்படி நான் என்ன எழுதிவிட்டேன்? எதோ என் மனதில் பட்டதை எழுதுகின்றேன். அதுக்கு இவ்வளவு ஆதரவா? (ஆரம்பிச்சுட்டான் டா! டேய் இது மங்காத்தா விமர்சனம்டா. அறிவிப்பு பில்ட் அப் இல்ல)

15 வருடங்களுக்கு முன் அந்த இளைஞனை பார்த்த போது  அவருடைய நடவடிக்கைகள் எல்லாம் காமடியாக இருக்கும். சொந்த காசில் டீ குடிப்பார். உழைத்து சம்பாரிக்க வேண்டும் என பேசிக்கொண்டிருப்பார். வாசகர்கள், ரசிகர்களிடம் கைமாத்து வாங்க கூடாது என்றெல்லாம் சொல்வார். நான் விழுந்து விழுந்து சிரிப்பேன். சில நேரங்களில்  அவருடைய பேச்சு அவ்வளவு ஸ்திரத்தன்மையாக இருக்காது. பேசும்போது நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் விடுவார். அவர் மங்காத்தா படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு.. இளையதிலகம் நடிகர் பிரபுவின் சித்தப்பா மகன் தான் இந்த வெங்கட் பிரபு.

====================

மங்காத்தா படத்தின் கதை என்ன??
                                                   
விநாயகம்(அஜீத்) ஒரு போலீஸ் ட்ரெஸ் போட்டு சுத்திக்கொண்டிருப்பவர். அறிமுக காட்சிக்காகவே தைக்கப்பட்ட போலிஸ் உடை அவருக்கு நன்றாக உள்ளது.

ஆங்.. எங்க விட்டேன்...??

நேற்று மன்மோகன்சிங் அனு உலை பாதுகாப்பு பற்றி பேசினார். இந்தியா போன்ற நாடு அனு என்ற பெண்ணின் வாழ்க்கைக்கு உலை வைப்பது  நன்றாக இருக்காது என அவருக்கு மெயிலி உள்ளேன். என்ன நடவடிக்கை எடுக்கிறார் என பார்க்கலாம்.

ரஜினியின் அடுத்த படம் ராணாவை இயக்க என்னை அழைத்து ட்வீட் செய்திருந்தார் தயாரிப்பாளர் ஏ.வி.மெய்யப்பச் செட்டியார். நான் பக்கிராம் வயது55 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதால் முடியாது என சொல்லிவிட்டேன். கோபித்துக்கொண்டாரா. அதற்கு என்னால் எதுவும் செய்ய முடியாது நான் எப்பவுமே இப்படித்தான். நான் லோக்கல்.


மங்காத்தா என்ற பெண்ணுக்கும் அஜீத்துக்கும் கள்ளதொடர்பு ஏற்படுகிறது. அதை அர்ஜூன் முறியடிக்கிறார். அஜீத்தின் காதலுக்கு உதவும் நாலு நண்பர்கள் என்ன ஆகிறார்கள்? அஜீத் என்ன ஆகிறார்? அர்ஜூன் என்ன ஆனார்? என்பதுதான் மீதிக்கதை. எல்லாத்தையும் இங்கயே சொல்ல முடியாது தியேட்டரில் பார்த்துக்கோ. பிரிஞ்சதா?
====================================

படத்தின் சுவாரஸ்யங்களில் சில... 

                                                                
அஜீத் 40வயது கேரக்டரில் நடிப்பதால் இது அஜீத் 40 என்றுதான் விளம்பரப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அஜீத்50 என விளம்பர படுத்தியுள்ளது வெங்கட் பிரபுவின் அனுபமின்மையை காட்டுகிறது.

அஜீத் தான் ஒரு பெரிய ஹீரோ என்ற நினைப்பை கழட்டி வைத்து லூயி ஃபிலிப் சட்டையையும், பீட்டர் இங்லாண்டு பேண்டையும் மாட்டிக்கொண்டு நடித்துள்ளார். அந்த முயற்சி பாராட்டத்தக்கது.
                                          
பில்லா இரண்டாவது பாகத்தில் நடித்த போது அந்த நெகட்டிவ் ஸ்டைல் பிடித்து இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். மனிதர் பூந்து விளையாடி இருக்கின்றார்..வில்லன் கெட்டப் நன்றாகவே இருக்கின்றது. அதனால்தான் சவுண்ட் சென்னசார் கட் செய்து, 98 பிரேம்வில் ***** என்று சொல்ல முடிகின்றது. என்னதான் சென்சார் செய்தாலும் கெட்ட வார்த்தைகளை நான் கண்டுபிடித்துவிட்டேன். ஒரு இடத்தில் அடியாள் ஒருவனை அஜீத் "ஜெட்லி சேகர்" என திட்டுகிறார். அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறார் அந்த அடியாள். அந்த இடமும் சென்சார் செய்யப்பட்டுள்ளது.

                                           
படத்தில் த்ரிஷா, லட்சுமிராய், அஞ்சலி, ஆண்ட்ரியா என பல நடிகைகள் நடித்துள்ளார்கள். ஒவ்வொரு நடிகைக்கும் ஒருமுறை என்ற கணக்கில் இந்த படத்தை நான் 6முறை பார்ப்பேன். படத்தில் மிகவும் பாராட்டப்பட வேண்டியது கடைசி வரைக்கும் மங்காத்தா திரிஷாவா, ஆண்ட்ரியாவா, அஞ்சலியா, லட்சுமிராயா என சொல்லாமலே படத்தை முடித்துவிட்டார் இயக்குனர். அடுத்த பாகம் எடுக்கப் போகிறார்கள் போல. பார்ப்போம்.

படம் முடிந்தவுடன் டைட்டில் கார்ட் போடும்போது என் குறும்படங்களில் நான் செய்த யுக்தியை வெங்கட் பிரபு காப்பியடித்துள்ளார். அது கண்டிக்கத்தக்கது
 ================================

தியேட்டர் டிஸ்கி...

சென்னை அப்போலோ ஆஸ்பிடல் ஆபரேசன் தியேட்டரில் இந்த படத்தைப் பார்த்தேன். நிறைய பேர் வாயில் துணி கட்டி வந்திருந்தார்கள். சிலர் கத்தி, கத்திரிக்கொளுடன் நின்றார்கள். படுத்துக்கொண்டே படம் பார்த்தது நல்ல அனுபவமாக இருந்தது.

திருட்டு டிவிடியில் வழக்கமாக பார்த்துவிட்டு தியேட்டரில் பார்ப்பது கொடுமையாக இருந்தது.
சவுண்ட் சரியில்லை. பீப் பீப் பீப் என எதோ சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. ஏசி நல்ல குளிராக இருந்தது.

 ================ ================
பைனல் கிக்

இது சினிமா தியேட்டர் இல்ல நாயே, ஆபரேசன் தியேட்டர் என சொல்லி கம்பவுண்டர் என் பின்புறத்தில் கிக் செய்து வெளியே விரட்டினார். அதுவே என் பைனல் கிக்காக அமைந்தது.

 ================ ================

வோடாபோனில் ஒரு சிம் வாங்கினால் ஒரு சிம் ஃப்ரீ. உடனே முந்துங்கள். இந்த சலுகை சிறிது காலம் மட்டுமே.

--
Antony Disouza,
Area manager, Vodaphone.


======================
மிக்க சந்தோசமா அந்தோணி??
===


பிரியங்காவுடன்
சாம் மார்த்தாண்டன்.


பெண்ணை பார்ப்பது அல்ல நீ..... கையை பிடித்து இழுத்து செருப்படி வாங்குவதே நீ.....

EVER YOURS...





Monday 29 August 2011

சைபர் க்ரைம் ஆபீசில் ஜெட்லி-பகுதி1. கவுண்டர் vs ஜெட்லி


கவுண்டர் இளனி கடை வச்சி வியாபாரம் பண்ணிக்கிட்டு இருக்காரு...அப்போ தூரத்துலயாரோ ஒருத்தர் போற வர்ற ஆளுங்களையெல்லாம் புடிச்சி புடிச்சி பேசிகிட்டு இருக்காரு

அங்க உக்கார்ந்துருந்த பிச்சகாரன புடிச்சி

"டேய் நீ தான அனானி... டேஇ நீ தான அனானி... எனக்கு அப்பவே தெரியும் டா..
நீ தான் அனானி. வாடா சைபர் க்ரைம் ஆபீசுக்கு.. வாடா வாடா..."

அப்புடியே ஒவ்வொருத்தனா கேட்டுகிட்டே வந்து கடைசில இளனி கடையில உள்ள செந்தில புடிச்சிடுறாரு..

"டேய் நீ தான அனானி..."

கவுண்டர்: "டேய் அவன் அனானி இல்லடா.. அவன் ஒரு காட்டு பன்னி...ஆமா நானும்உன்ன அப்பத்துலருந்து பாத்துகிட்டு இருக்கேன்..
நாயே ஒவ்வொருத்தனையா பாத்து நீ அனானியா
நீ அனானியான்னு கேட்டுகிட்டு வர்ற... யாருடா நீ...

ஜெட்லி:
அண்ணேன் உங்கள பாத்த அனானி மாதிரி தெரியல... அதுனால சொல்றேன். நா ஒரு பிரபல பதிவரா இருக்கேன்.

(இத கேட்ட ஒடனே கடைக்கு பக்கத்துல படுத்துருந்த நாய் கடுப்பாயி எழுந்து ஜெட்லிய பாத்து படு பயங்கரமா கொலைக்கிது) 

கவுண்டர்: (நாய பாத்து...) டேய் புரூஸ்லீ.... விடு... விடு.. இத பாரு தம்பி இப்ப சொன்னது இதுவே கடைசி தடவையா இருக்கனும்... இன்னொரு தடவ இத என் புரூஸ்லி கேட்டான்.. உன் வாய்க்குள்ள வாந்தி எடுத்து வச்சிருவான்...

ஜெட்லி: என்னது நாய் பேரு புரூஸ்லியா?

கவுண்டர்:
ஏன் இருக்க கூடாதா.... என் நாய் புரூஸ்லி ரசிகண்டா.. ஆமா உன்பேரு என்ன?

ஜெட்லி: ஜெட்லி சேகர்

கவுண்டர்: இய்ய்ய்ய்ய்ய்.... ஆமா இதுல ஜெட்லி என்ன உங்க 'சர்' நேமுங்களா?

ஜெட்லி: நான் ஜெட்லி மீது கொண்ட தீராத பற்றினால் அந்த பேர என் பேருக்கு முன்னாடி சேத்துகிட்டேன்...

கவுண்டர்: இந்த விசயம் ஜெட்லிக்கு தெரியுமா?

ஜெட்லி:
தெரியாது.

கவுண்டர்:
மகனே... என்னிக்கு தெரியுதோ அன்னிக்கு தாண்டி உனக்கு க்ளைமாக்ஸு..சரி மேல சொல்லு...

ஜெட்லி:
பதிவுலகத்துல என் வளர்ச்சி புடிக்காம யாரோ அனானின்னு ஒருத்தன் எனக்கு கமெண்டு போடுறான்... எனக்கு எதிரா பதிவு எழுதுறான்.

கவுண்டர்: உன் வளர்ச்சி புடிக்காம?.... சரி அவன் பேரு என்ண்டா?

ஜெட்லி: என்னங்க லூசு மாதிரி கேக்குறீங்க? அதான் சொன்னேனே அவன் பேரு அனானின்னு..

கவுண்டர்:
இய்ய்யய்ய்ய்யி .... என்னது அனானின்னு ஒரு பேரா?

ஜெட்லி: ஆமா... ஜனனி, ரஜினி, கஜினி மாதிரி அனானி.... நா ஏற்கனவே அவன் மேலஎங்க ஊர் elementry  ஸ்கூல் ஹெட் மாஸ்டர்கிட்ட கம்ளைண்ட் குடுத்துட்டேன்.. அப்புடியேஇந்த சைபர் க்ரைம் ஆபீசுலயும் கம்ப்ளைண்ட் குடுத்துட்டு போகலாம்னு வந்தேன் ஆமா இந்த சைபர் க்ரைம் ஆபீஸ் எங்க்ண்னே இருக்கு?

கவுண்டர்: ஆமா நீ இப்ப என்ன வேல பாத்துகிட்டு இருக்க?

ஜெட்லி:
சில பல பிட்டு படங்களுக்கு விமர்சனம் எழுதுகிட்டு இருக்கேன்

கவுண்டர்:
அதயே இன்னும் கொஞ்ச நாள் பண்ணு...அவங்களே வந்து உன்ன கூட்டி  கிட்டு போவாங்க..

ஜெட்லி: நக்கல் அடிக்காதீங்கண்ணே.... இந்த விஷயத்த சி.எம் முக்கு நா பஸ்ல அனுப்பிருந்தேன் அவரும் அனானி எங்க இருந்தாலும் அவன் புடிச்சி காவல்ல வைக்கிறேன்னு சொல்லிருக்காரு...

கவுண்டர்: என்னது சி.எம் ah உனக்கு தெரியுமா?

ஜெட்லி: நல்லா  தெரியும்ங்க... அவரு என்னோட வாசகர் தான்..
ஒருதடவ மெரினா பீச்ல நடந்த பதிவர்கள் சந்திப்புல P.M தான் C.M ah எனக்கு
அறிமுகப்படுத்தி வச்சாரு.... அப்பலருந்து C.M என்னோட தீவிர ரசிகனாயிட்டாரு.. அதுவும் குறிப்பா அந்த "கு...ல வளையம் மாட்டிகிட்ட" சிறப்பு சிறுகதைய படிச்சி எனக்குபோன் பண்ணி வாழ்த்து சொன்னாருன்னா பாருங்களேன்... அதோட அந்த வளைய கதைய படமா எடுத்தா அதுக்கு வரி விலக்கும் தர்றதா சொல்லிருக்காரு..

கவுண்டர்
: ஏண்டா தியேட்டர்ல ரிலீஸ் ஆகுற படத்துக்கு தாண்டா வரி... விலக்கு எல்லாம் ... பிட்டு சைட்டுல ரிலீஸ் பண்ண போற படத்துக்கெல்லாம் எதுக்குடா வரி விலக்கு?

ஜெட்லி: இப்ப சொல்ல முடியுமா முடியாதா?

கவுண்டர்: டேய்... என் கடையிலயாவது ஒரே ஒரு புரூஸ்லி மட்டும் தான் இருக்கான்.. ஆனா அந்த ஆபீஸுல 5 ஜாக்கி இருக்கு... அங்க நீ போய் பேச தேவையில்ல  வாய தொறாந்தியன்னாவ்வே வாய கடிச்சி வச்சிரும்...

ஜெட்லி: அதெல்லாம் சைபர் க்ரைம் ஆபீசுல வெள்ளையடிக்கிற என் வாசகர் பாத்துக்குவாரு நீங்க அட்ரஸ் மட்டும் சொல்லுங்க.. பாத்த நல்லவரு மாதிரி இருக்கீங்க....

கவுண்டர்:
 ரொம்ம்ப சொரியிறியேடா... சரி இப்புடியே நேரா போயீ சோத்தாங்கை பக்கம் திரும்பி  அப்புறம் கொழம்பு கை பக்கம் திரும்புனா மூனாவது கட்டடம்.... அப்புறம் தம்பி ஒரு சின்ன அட்வைஸ்... கம்ப்ளைண்ட் கொடுக்கும் போது அவன்  அட்ரஸ் மட்டும் குடு.. தப்பி தவறி உன்னோட ப்ளாக் அட்ரஸ குடுத்து  தொலைச்சிறாத.. அத அவனுக படிச்சானுக அப்புறம் ஆயுசுக்கும் உனக்கு களி தான்....


ஜெட்லி: சரிண்ணே... ரொம்ப நன்றி.. அப்புடியே கடையூட  நின்னீங்கன்னா ஒரு போட்டோ  எடுத்துக்குவேன்...

கவுண்டர்: எதுக்குடா?

ஜெட்லி: இல்லண்னே.. நாளைக்கு என்னோட பதிவுல "என்னுடைய நீண்ட நாள்
வாசகர் இளனிக்கடை கவுண்டரை சந்தித்தேன்" ன்னு போட்டுக்குவேன்... அதுக்கு தான்

கவுண்டர்: (அருவாளையும் ஜெட்லியையும் மாறி மாறி பார்க்கிறார். ஜெட்லி ஓடுகிறார்)



அடுத்து சைபர் க்ரைம் ஆபீசில் சந்திப்போம்!

Friday 26 August 2011

இரண்டு நொடி தாமதமாக சனிக்கிழமை ஆண்வெஜ் பெண்வெஜ்:



ஆல்பம்:

பெண்களூரில் இன்று நானும் சில வாசக நண்பர்களும் பேன்டா குடித்தோம். பேன்டா ஆரஞ்சு நிறத்தில் இருந்தது எனக்கு பிரம்மிப்பாக இருந்தது. யார் 'பேன்டா'லும் மஞ்சளாக தானே இருக்க வேண்டும்... ஏன் பேண்டா ஆரஞ்சு நிறத்தில் இருக்கிறது என்று சிந்தித்தபடியே காசு கொடுக்காமல் அங்கிருந்து நகர்ந்தேன்...
====================

ஆட்சிக்கு வந்து நூறு நாள் ஆனதை ஒட்டி 'ஜெ' இன்று ட்விட்டரில் என்னை விருந்துக்கு அழைத்தார்.  என்னைப் பொறுத்தவரை தமிழ்நாட்டுக்கு ஒரே முதல்வர் தான், அது முதல்வன் அர்ஜூன் தான் எனச் சொல்லிவிட்டேன்...
====================

'அன்னா'ஹஜாரே உண்ணாவிரதம் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. 'தங்கச்சி'ஹஜாரே உண்ணாவிரதம் இருந்திருந்தால் எனக்கு உடன்பாடு இருந்திருக்கும்.
====================

சென்னையில் நேற்று நல்ல மழை பெய்ததால் பெண்களூரில் எல்லாரும் நன்றாக நனைந்தோம். ஆனால் பெண்களூரில் பயங்கர வெயில். ஐ லவ் யூ ரஸ்னா....
====================

அணு உலை பாதுகாப்பு பற்றி பிரதமர் பேசியிருந்தார். கோவை டிஎம்டி கம்பிகள் பயன்படுத்தி வேலி அமைத்து அணுஉலைகளை பாதுகாக்கலாம் என அவருக்கு கூகிள் பஸ்ஸில் செய்தி அனுப்பியிருக்கிறேன். என்ன செய்கிறார் என பொருத்திருந்து பார்க்கலாம்.
====================

மிக்ஸர்: 


நேற்று ஈரோடுக்கு ஒரு காதுகுத்திற்கு சென்றிருந்தேன். குழந்தையின் காதில் அந்த ஆசாரி ஓங்கி குத்தியதை பார்க்க பாவமாக இருந்தது. உடனே கிளம்பிவிட்டேன். வழியில் ஒரு சிறுவன் குச்சியை வைத்து அடித்து அடித்து டயர் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான். டயர் பஞ்சர் ஆகியிருந்தது. பஞ்சர் ஆன இடத்தை படத்தில் குறியிட்டு காட்டியுள்ளேன். அவனிடம் "நான் பஞ்சர் ஓட்டித் தருகிறேன் தம்பி" என்று கூறினேன். "உன் மொகரைய பாத்தா சரி இல்ல. நீ திருடிட்டு ஓடிருவ" என்றான். அந்தப் பையனின் நேர்மை எனக்கு பிடித்திருந்தது. பின் அவனிடன் என் ஈமெயில் ஐடியையும், பால்கார்டு நம்பரையும் கொடுத்துவிட்டு உன் அப்பாவை விட்டு எனக்கு போன் செய்யச் சொல் எனக் கூறிவிட்டு அவனிடம் டயர் வண்டியை பிடிங்கி படுவேகமாக ஓட்ட ஆரம்பித்தேன். ஒருவழியாக பெண்களூர் வந்து சேர்ந்தேன்.  

====================

பல வாசகர்கள் லோக்பால் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என கேட்கிறார்கள். நான் லோக்கல் பால் குடிப்பதில்லை. ஆவின் பால் மட்டுமே..அதுவும் வேறு யாராவது வாங்கி கொடுத்தால் தான் எனக் கூறிவிட்டு போனை கட் செய்துவிட்டேன்..
====================


வாசகர் கடிதம்:

அன்புள்ள மகன் முருகேசனுக்கு உன் அம்மா எழுதுவது. நல்லா இருக்கியா? காசு அனுப்ப சொன்னெனெ ஏன் அனுப்பல? இங்க உன் மனைவி மகள் எல்லாம் நல்லா இருக்காங்க. நீ எப்ப வர்ற? எம்.ஜி.ஆரு செத்துப் போயிட்டாருனு சொல்றாங்களே உண்மையா? அவரு நமக்கு தெய்வம் மாதிரி. உடம்ப பாத்துக்க... அடிக்கடி எழுது..

இப்படிக்கு,
உன் அம்மா,
கருப்பாயியம்மாள்,
19/2/1985
.........................................
அன்பின் முருகேசன். நன்றி. எம்.ஜி.ஆரை நான் சந்தித்தபோது அவர் முதல்வராக இருந்தார். என்னை சந்திக்கவேண்டும் என டிவிட் அனுப்பியிருந்தார். பின் பல வாசகர்கள் கேட்டுக்கொண்டதால் போய் பார்த்தேன். சாண்வெஜ் நாண்வெஜ் பற்றி பலநேரம் பேசிக்கொண்டிருந்தார். ஜெயலலிதாவிடம் "இவர் தான் சாம். பிரபல பிட்டு எழுத்தாளர்" என அறிமுகபடுத்தினார். அப்போதுதான் தெரிந்தது அவர் பக்குவப்பட்டவர் என்று. பின் அவரை நான் பார்க்கவில்லை. அவரை அடுத்தமுறை பார்த்தால் கேளுங்கள் அவர் ஏன் கலர் படங்களில் அதிகமாக நடிக்கமாட்டேன் என்கிறார் என்று. இன்னும் ஜெயாடிவியில் ப்ளாக் அண்ட் வைட் படங்களையே தான் போடுகிறார்கள். அவரை இனியாவது கலர் படங்களில் நடிக்க சொல்லுங்கள்... ஜெயலலிதாவுடன் மட்டுமே நடிக்காமல் த்ரிஷா, அசின் என ஹீரோயின்களை மாற்றி நடித்தால் படம் இன்னும் நன்றாக ஓடும்....
மறந்து போய் கடிதத்தின் முடிவில் உங்கள் அம்மாவின் கையெழுத்தை போட்டுவிட்டீர்கள்... பரவாயில்லை.. நன்றி...

 ====================
பிலாசபி ஆண்டி:
செருப்படியில் நல்ல செருப்படி, பிஞ்ச செருப்படி என்றெல்லாம் பார்க்கக் கூடாது. நமக்கு செருப்படி தான் முக்கியம்.
 ====================

இந்த வார நிழற்படம்:


                                     
இவர்கள் சொந்த காசில் டீ குடித்தது காமடியாக இருந்தது. உடனே க்ளிக்கிவிட்டேன். இந்த படம் என் கைவண்ணம்.

 ==================== ====================


பிரியங்காவுடன்
சாம் மார்த்தாண்டன்.


பெண்ணை பார்ப்பது அல்ல நீ..... கையை பிடித்து இழுத்து செருப்படி வாங்குவதே நீ.....

EVER YOURS...






Wednesday 24 August 2011

பாட்சா-நக்மா அஜால்- ரகுவரன் குஜால்- விமர்சனம்.



இந்த படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக நான் இன்று ஆபிஸ் சென்ற உடன் வயிற்று போக்கு என்று சொல்லி மேனேஜரை ஏமாற்றி விட்டு கிளம்பி விட்டேன். (எண்டா உனக்கு வெக்கமா இல்லையானு கேக்க கூடாது). ஈரோடு பதிவர் நண்பர் வெட்டி வீலாயுதமும் அவரது ஆபீசில் காலில் தலைவலி என்று பொய் சொல்லி அவரது மேனேஜரை ஏமாற்றிவிட்டு வந்திருந்தார். பிறகு இருவரும் படம் பார்க்க கிளம்பினோம்.

 ரஜினிக்கு ஜனா அஜித் போல் ஒரு ஆக்ஷன் படம் பண்ண வேண்டும் என்ற ஆசை இருப்பதில் தப்பு இல்லை. அதற்கு ஸ்க்ரிப்ட் நன்றாக அமைந்தால் மட்டும் பத்தாது. அதற்கு விஜயின் அர்பணிப்பு, பாடி மேயிண்டனன்சில் விஜய டி ராஜேந்தரின் உழைப்பு, நகுலனனைப்போல் பல வருட அனுபவம் இதெல்லாம் தேவை.  
        
ஜனா படத்தின் கதையை அப்படியே காப்பி அடித்து வந்திருக்கும் படம் தான் பாட்ஷா. (என் டீ அடிக்கவில்லை என்று கேட்க கூடாது)  படத்தில் ஹீரோ முதல் பாதியில் மிக அமைதியாக இருக்கிறார் (ஏன் அவரு ஊமையான்னு கேக்க கூடாது) பின்னர் இடைவேளையில் தங்கச்சியை வில்லன் ரேப் செய்ய ட்ரை பண்ணும் போது ஹீரோவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்து சண்டை போடுகிறார். பின்னர் பிளாஷ் பேக்கில் ஹீரோ ஒரு பெரிய நல்லது செய்யும் தாதா என்பது தெரிய வருகிறது. (ரொம்ப புது ஸ்டோரி ). அட போங்கப்பா எத்தனை படம் இதே மாதிரி பாக்குறது? இந்த படம் ஜனா, பகவதி, அரசு போன்ற படங்களிலிருந்து காப்பி அடிக்கப்பட்டது என்பதை அப்பொழுதே கண்டுபிடித்து விட்டேன்.

    நான் அசிஸ்டன்ட் டைரக்டருக்கு அசிஸ்டன்ட் ஆகா ட்ரை செய்து கொண்டு இருப்பதால் இது போன்ற விஷயங்களை உடனே கண்டுபிடித்து விடுவேன்.( பல வருசமா நீ ட்ரை மட்டும் தானடா பண்ணிக்கிட்டு இருக்கன்னு கேக்கக் கூடாது) 

       படத்தில் முக்கியமாக சொல்லப்பட வேண்டிய விஷயம் நக்மா.. கும் என்று இருக்கிறார். அவருக்காக மட்டுமே குடுத்த காசு தகும். அதுவும் ஸ்டைலு ஸ்டைலுதான் பாட்டில் அவரது costume   மிக பிரமாதம். நான் ரசித்து ரசித்து பார்த்தேன். இன்னும் ஒரு ஹீரோயினை போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

 ரகுவரன் சுமாரான வில்லனாக நடித்திருக்கிறார். அவர் இன்னும் நடிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அவரை பார்த்தல் வில்லன் போன்றே தோன்ற வில்லை. அவரும் படத்தில் டபுள் ஆஷனில் நடித்து இருக்கிறார். அவர் நக்மாமை ரேப் செய்வது போல் ஒரு சீனை எதிர்பார்த்து கொண்டிருந்தேன். அனால் கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.


படத்தில் ரசிக்க வைத்த வசனங்கள்: 

1 . மாணிக்கம் அண்ணன் இந்த பணத்த குடுத்துட்டு வர சொன்னாரு

2  தங்கசிக்கு கண்ணாலம் வச்சிருக்கேன் கண்டிப்பா வந்துருங்க

3 .  ரஜினி: "come" ya

      நக்மா:  coming ya

4. எனக்கு சண்டைன்னாலே பயம்

 5 . யாருடா இந்த   இந்திரனுக்கு அரஸ்டு வாரண்டு குடுத்த ஆம்புள?

6 . இனிமேயும் எங்களால பொறுக்க முடியாது 

7 . நாம வச்ச bomb ah பாட்ஷா எடுத்துட்டான்

8 . ரகுவரன் : "சலாம் அலைக்கும்" பாட்ஷா பாய் 

      ரஜினி : "அலைக்கும் அஸ்ஸலாமு" ஆண்டனி 

 9 . சொல்லுங்க ... சொல்லுங்க.. சொல்லுங்க.... நீங்க யாரு... நீங்க யாரு... நீங்க யாரு? 

 10 . "என் பொண்டாட்டி புள்ளைய கொன்னது யாரு? " 


டைரக்டர் கைதட்டல் பெறும் இடங்கள்: 

1 . டைட்டில் போடும் பொது தமிழிலும் இங்கிலீசிலும் மாற்றி மாற்றி போட்டது புதுமை .

 2 . ரஜினியின் தங்கச்சியையும் அழகான பெண்களாக தெரிவு செய்ததற்கு ஸ்பெசல் கைதட்டல்

3 . கோயிலில் இருந்து எடுத்த பாமை ரஜினியை கரைக்டாக தண்ணிக்குள் தூக்கி வீச செய்ததற்கு 

 4 . படத்தில் ரஜினிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் நக்மாவுக்கு கொடுத்ததற்கு 

  .5  ரஜினியின் நண்பன் சிங்கை கொன்று sentimentilum பூந்து விளையாடியதற்கு 


இயக்குனரிடம் சில கேள்விகள்: 

 1 . இந்த படத்துக்கு ரஜினிய என் ஹீரோவா போட்டீங்க? 

2 . நக்மா மொத சீன்ல எதுக்கு செகப்பு கலர் ட்ரெஸ் போட்டுக்கிட்டு வராங்க? 

 3 . யுவரானிய ஆனதராஜ் தள்ளிவிடும் பொது ஏன் யுவராணி விழுகுறாங்க?

4. உங்க வீட்டுல இன்னிக்கு என்ன கொழம்பு? 

5. ரஜினி பாம்பெயிலருந்து சென்னைக்கு டிரைன்ல வந்தாரா இல்ல ப்ளைட்ல வந்தாரான்னு படத்துல நீங்க காமிக்கவே இல்ல.


6 . இன்டர்வல் சீனில் ரஜினி கட்டையை தூக்கி போட்டு எல்லா லைட்டையும் உடைத்த பின்பு இருட்டியிருக்குமே உங்களுக்கு பயமாக இல்லையா?

7. வீட்ல எல்லாரும் சவுக்கியமா?

                                       

இந்தப் படம் எல்லா சென்டர்களிலும் தியேட்டரில் ஓடும்.  மற்ற அனைத்து சென்டர்களிலும் இரண்டரை மணி நேரம் ஓடும். இந்தப் படத்தை நான் KTV தியேட்டரில் பார்த்தேன்.

 இந்த படம் A  சென்டரில் 2 .30 மணி நேரம் ஓடும் 

 B  மற்றும் C  சென்டர்களிலும் 2 .30 மணி நேரமே ஓட வேண்டும். ஒரு பாடலை கட் செய்தால்  2 .25  மணி நேரம் ஓடும்

எதிர்பார்கபடும் CNN  டாப் 10  ரேட்டிங் -11
எதிர்பார்க்கும் ஆனந்தவிகடன் மார்க் - அஃக்மார்க்
கே.பி கமெண்ட் - பாரத் மாதா கீ ஜே.  


Sunday 21 August 2011

ஜெட்லி சேகர்- ஆசிரியர் குறிப்பு. (ஒரு வரலாற்றின் கதை)



ஜெட்லி சேகர் என கோடானுகோடி மக்களால் அன்போடு அழைக்கப்படும் ஆசிரியர் அவர்கள் 1867ல் பிறந்தார். இவரது பெற்றோர் இவருக்கு இட்டபெயர் சேகர் என்பதாகும். மிகவும் இளவயதிலேயே அதிகமாக கெட்ட வார்த்தை பேசும் திறன் கொண்டிருந்ததால் இவர் எட்டயபுரம் அரண்மணையில் ஆஸ்தான கெட்டவார்த்தைக் கவிஞராக பணியாற்றினார். பின் பள்ளிபருவத்தில் தனக்குத் தானே வாசகர் கடிதங்கள் எழுதி பலர் முன்னிலையில் வாசித்துக்காட்டும் வல்லமை பெற்றிருந்ததால் இவரை "வாசகக் கவிஞர்" என்று "தானே புகழ்ந்த தானே கவிஞர்" எனப் போற்றுவோரும் உளர். இவர் எழுதிய கெட்டவார்த்தை அகராதி ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிநூலாக பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல்நாட்டு அறிஞர்களால் பாராட்டப்பட்டது.

பின் ஷகிலா என்னும் வீராங்கனையின் பால் ஈர்க்கப்பட்டு தன் பெயரை ஷகிலாதாசன் என மாற்றிக்கொண்டார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. சுதந்திரப் போராட்டக்காலங்களில் தன் கடலூர் வீட்டில் இருந்தபடியே "சாண்வெஜ் நாண்வெஜ்" என்ற பத்திரிக்கையை நடத்தி வந்தார். அதில் இடம்பெற்ற கட்டுரைகள் ஆங்கிலேய அரசுக்கு சிம்மசொப்பனமாக விளங்கின. துவண்டு கிடந்த இளைஞர்கள் மத்தியில் இவரது 'ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட்' பகுதி தேசபக்தி அனலை மூட்டியது. இவரது பத்திரிக்கையில் வரும் விளம்பரங்கள் உலக வியாபார சந்தையை இவர்பக்கம் திருப்புவதாக அமைந்தது. அமெரிக்க வெள்ளை மாளிகை இவர் வாங்கி கொடுத்த காலிமனையில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது எழுத்தாற்றலைக் கண்டு அஞ்சிய ஆங்கில அரசு இவர்மேல் கைது ஆணை பிறப்பித்து உத்தரவிட்டது. கைது ஆணையை எடுத்துக்கொண்டு பெரும்படையுடன் தன் வீட்டுக்கு வந்த ஆங்கிலேய அதிகாரி ஜாக்சன் துரையிடம் "உன் ரேஷன் கார்டு எங்கே? உன் பால்கார்டு அங்கே? உன் atm கார்டு எங்கே? எனக்கு இண்ட்லியில் ஓட்டுப்போட்டாயா? தமிழ்மணத்தில் ஓட்டு போட்டாயா? இல்லை நான் எழுதும் காவியங்களுக்கு "மீ த ஃபர்ஸ்ட்" எனக் கமண்ட் போட்டாயா? எனக்கு ஒரு வாசகர் கடிதம் தான் எழுதினாயா? அனானியா? யுனானியா?" என இவர் பேசிய வசனம் சரித்திரப் புகழ் வாழ்ந்தது. இவர்தம் வீரத்தை கண்டு அஞ்சிய ஆங்கிலேய அரசு கடலூர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது.

அடிக்கடி இவர் பத்திரிக்கையில் அடிக்கடி இவர் எழுதிய அறிக்கைகளும், அனானிகளால் அவர் எப்படியெல்லாம் பாதிக்கட்டார் என்ற அறிவுப்பும் பல பெண்களின் கண்ணில் கண்ணீர் வரவழைப்பதாய் அமைந்திருந்து. பெண்களால் இவர் 'அழுவாச்சி கவிஞர்' என அன்புடன் அழைக்கபெற்றார். 1957ஆம் ஆண்டு தமிழறிஞர் கூட்டமைப்பில், 'இவர் எழுத்துக்களை சிறுவர்கள் படித்தால் அவர்களுக்கு தமிழ் மறந்து போகும்' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைக் கண்டு கடும்கோபம் கொண்ட இவர் "அனானிகளுக்கு எச்சரிக்கை", "அனானிகளுக்கு இறுதி எச்சரிக்கை", "அனானிகளுக்கு கடைசி இறுதி எச்சரிக்கை" என வரிசையாக தொடர் கட்டுரைகள் எழுதினார்.  பின் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் அந்த கட்டுரைகள் 'சாந்தி' என்ற பெயரில்,  மந்த்ரா பேடி நடிப்பில் மெகாதொடராக ஒளிபரப்பப்பட்டு பெருவெற்றி பெற்றது.

1989ல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் கக்கூஸில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட டம்ளரை திருடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். உலகெங்கும் இவர் வாசகர்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாகவும் இவரது தோழர் ஜார்ஜ் புஷ்ஷின் நேரடி தலையீட்டின் காரணமாகவும் விடுதலை செய்யப்பட்டார். பின் தன் வாழ்க்கை வரலாற்றை 'பக்கிராம் வயது 139' என்ற பெயரில் குறும்படமாக எடுத்து வெளியிட்டார். youtubeல் அந்த படத்தைப் பார்த்து உலகமே ஒருநாள் அமைதியாக இருந்தது. அதனால் உலக அமைதிக்கான நோபல் பரிசு அந்தப் படத்தை இயக்கிய ஜெட்லிசேகருக்கு வழங்கப்பட்டது.

இவர் எழுத்துலகுக்கு ஆற்றிய பங்கினை அடையாளப்படுத்தும் பொருட்டு நியூயார்க் பல்கலைக்கழகம் தனது கக்கூஸிற்கு, ஜெட்லி கக்கூஸ் எனப் பெயரிட்டு நன்றி தெரிவித்துள்ளது. சென்னை மெரினாவில் இவர் சிலையை நிறுவுவதற்காக கடலுக்கு நடுவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடல் வற்றுவதற்காக அரசு காத்திருக்கிறது. சிலையை நீங்கள் படத்தில் காணலாம். விரைவில் சிலை நிறுவப்படும்.





பிரியங்காவுடன்
சாம் மார்த்தாண்டன்.


பெண்ணை பார்ப்பது அல்ல நீ..... கையை பிடித்து இழுத்து செருப்படி வாங்குவதே நீ.....

EVER YOURS...




Thursday 18 August 2011

செவ்வாய் கிரக பெண் பதிவரின் வாழ்க்கையில் நடந்த திடுக் சோகம். (பெண்களுக்கான விழிப்புணர்வு பதிவு)




  செவ்வாய் என்றால் திங்களுக்கு அடுத்து வருவது. அதனால் பொதுவாகவே செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்காது. அங்கு தண்ணி இல்லை என்ற ஆச்சரியமான விஷயத்தை கேட்டு 'திடுக்' என ஆடிப்போனேன். என்னடா சாம் இது செவ்வாயில் 'வாய்' இருந்தும் தண்ணி இல்லையே. இதைத்தான் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என பெரியவர்கள் சொன்னார்களோ என்னவோ என எண்ணிக்கொண்டிருந்தபோதுதான் அந்த செவ்வாய் கிரக பதிவர் எனக்கு ஃபோன் செய்து அழுதார்.

அந்த செவ்வாய் கிரக பதிவரின் பெயர் ரீமாசென் (கீதா என்ற உண்மையான பெயரை அவர் வெளியிடவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதால் ரீமாசென் என பெயர் மாற்றப்பட்டுள்ளது). ரீமாசென் ஒரு ஐ.டி கம்பனி இருக்கும் எட்டு மாடி கட்டிடத்தில் வேலை செய்யவில்லை. அதற்கு அருகில் இருக்கும் ஒரு டீ கடையில் 'டீ லீடர்' (Tea leader)ஆக வேலை செய்கிறார். அவரது கணவர் அடிக்கடி வேலை விஷயமாக புதன் கிரகம் சென்றுவிடுவதால் பெரும்பாலும் பெண்பதிவர் ரீமாசென் டீ கடையே கதி என இருந்திருக்கிறார். 

இந்நிலையில் அந்த டீ கடைக்கு அருகில் இருக்கும் இட்லி கடையில் வேலை செய்யும் சேதுபதியின் (அவர் மிகவும் கொடுமையானவர் என்பதால் அவர் பெயர் மாற்றபடவில்லை) வீடு ரீமாசென்னின் வீட்டுக்கு அருகிலேயே இருந்துள்ளது. இதனால் அடிக்கடி ரீமாசென்னை டீ கடையில் ட்ராப் செய்துவிட்டு ரீமாசென்னின் கணக்கில் ஓசி டீ குடிப்பதை சேதுபதி தன் வழக்கமாக வைத்துள்ளார். சரி சேதுபதியும் இட்லி லீடராக பணிபுரிவதால் டீசண்டானவர் தானே என நினைத்து ரீமாசென்னும் இதை அனுமதித்துள்ளார்.

இந்நிலையில் ரீமாசென்னின் பிராஜக்ட் மானேஜர் விஷால் (கோவிந்தனின் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் பெயர் விஷால் என மாற்றப்பட்டுள்ளது) ஒருநாள் ரீமாசென்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். முதலில் கண்டிக்க நினைத்த ரீமாசென் பின் தன் டீ-லீடர் பதவி பறிபோய்விடுமோ என்ற எண்ணத்தில் பேசாமல் இருந்திருக்கிறார்.

சில நாட்கள் கழித்து விஷால் ஒருபடி மேலே சென்று ரீமாசென்னின் வீட்டுக்கே சென்றுவிட்டார். ஆனால் அன்று செவ்வாய்கிழமை என்பதால் புதன் கிரகத்துக்கு செல்லாமல் செவ்வாய் கிரகத்திலேயே இருந்திருக்கிறார் ரீமாசென்னின் கணவர் சுரேஷ். ஆனால் இது விஷாலுக்கு தெரியாது. ஆனால் இது ரீமாசென்னுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் எனக்கு தெரிந்துவிட்டது.

விஷால் மெல்ல படியேறியிருக்கிறார். டக் டக் என ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்திருக்கிறார். கதவு அருகில் வந்து தட்ட போகும்போதுதான் 'அதை' பார்த்திருக்கிறார் விஷால். பின் (அதை) காலிங் பெல்லை அமுக்கியிருக்கிறார். நிமிடங்கள் ஓடின. மீண்டும் அமுக்கினார். நிசப்தம்.

கதவு திறக்கப்பட்டது. பார்த்தால் ரீமாசென்னின் கணவர் சுரேஷ் நின்றிருந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இதைப் பார்த்த ரீமாசென் ஓடிவந்து அழுதுகொண்டே கணவரை கட்டிக்கொண்டு பேசினார், "இவர் தாங்க என் பிராஜக்ட் மாஸ்டர். என்கிட்ட எப்பவுமே தவறா நடந்துக்குறாரு" என சொல்லி கதறியிருக்கிறார். ஏன் சாம் இப்படிலாம் கூட நடக்குமா என என்னையே நான் கேட்டுக்கொண்டேன்.

ஒருநிமிடம் சுரேஷ் கண்ணிமைக்காமல் விஷாலை பார்த்திருக்கிறார். பின், "ஏம்பா விஷால். பாக்க வாட்டசாட்டமா இருக்கியே தவறா நடக்காம நேரா நடக்க கூடாதாப்பா?" எனக்கேட்டிருக்கிறார். இதைக்கேட்டு மனம் திருந்திய விஷால் பின் சனி கிரகத்துக்கு மாற்றல் ஆகிபோய்விட்டாராம்.

ஆனால் சனி கிரகத்தில் இன்னும் விஷால் தவறாக தான் நடக்கிறாராம். ஆனால் இப்போது செவ்வாய் கிரகத்தை சேர்ந்த அந்த பெண்பதிவர் நிம்மதியாக தன் குழந்தைகளுடன் வசிக்கிறாராம்.



நாம் கற்றுகொள்ளவேண்டிய பாடங்கள்:

1) பதிவின் பெயர் சீரியசா இருக்கேனு உள்ள வந்து பாத்துரக்கூடாது. பாத்தவன் வாழ்க்கைல தான் 'திடுக்' சோகம் வந்துரும்!

2)இதில் வந்த சேதுபதிக்கும் இந்த பதிவுக்கு எந்த தொடர்பும் இல்லை. சும்மா ஒரு பத்தி எக்ஸ்ட்ரா ஆகட்டுமே என சேர்த்துவிட்டேன்.

3)இதே கதையை நான் திருப்பியும் பதிவா போட்டா நீங்க கண்டுக்க கூடாது. ஒருநாளைக்கு முப்பது பதிவு போடுறதுனால தவறு நடக்குறது இயல்பு.

4) இதே செய்தியை நீங்க ஜூ.வி, ஆ.வி, குமுதம் ரிப்போர்ட்டர்ல படிச்சிருக்கலாம். ஆனா அப்படி காசு கொடுத்து மூணு புக்கு வாங்குறதுக்கு பதிலா இங்க வந்தீங்கன்னா அதே செய்திய இலவசமா படிச்சுக்கலாம்.

டிஸ்கி:   நடுவில் வரும் படங்களுக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை. ஏனென்றால் பதிவுக்கும் பதிவுக்குமே சம்பந்தமில்லை!

Wednesday 17 August 2011

யார் சாம் மார்த்தாண்டன்? (சாம் காட் வெரி ஏங்க்ரி!)

சார். சாம் மார்த்தாண்டன் ஒரு தனிநபர் இல்ல சார். இது ஒரு நாலு பேர் கொண்ட குழு சார். ஜெட்லிசேகர் கொடுத்த கெட்டவார்த்தை டார்ச்சர் தாங்காம நேத்து புதுசா மூணு பேரு எங்க குழுல சேர்ந்திருக்காங்க சார்.  Moral Police பண்றதுக்காக நாங்க எழுதலீங்க சார்.  எங்க நோக்கம் எல்லாம் தனிமனித தாக்குதல் துளியும் இல்லாம Spoof மற்றும் Parody பதிவுகள் எழுதுறது தான் சார். அப்படி எழுதுறது மூலமா மக்களை சிரிக்க வைக்கிறது சார். மக்களும் கடந்த ஒருவாரமா நல்லாவே சிரிச்சாங்க சார்.

Spoof பண்றப்ப பிரபலமா இருக்குறதை தான் சார் இன்ஸ்பிரேஷன் எடுத்துக்க முடியும். ஓடாத ப்ளாகை எல்லாம் இன்ஸ்பிரேசன் எடுத்தா மக்களுக்கு காமடி புரியாது சார். உதாரணத்துக்கு 'தமிழ்படம்' பாத்தீங்கன்னா பிரபல படங்களை தான் கிண்டல் பண்ணிருப்பாங்க. ஓடாத படத்தை கிண்டல் பண்ணா 'தமிழ்ப்படம்' ஓடிருக்காது.

பக்கி-லீக்ஸ் என்னைக்குமே கெட்டவார்த்தைகளையும் மற்றவர்களை தரக்குறைவா விமர்சிப்பதையும் அலோ பண்ணாது சார். இங்க வெறும் சிரிப்புக்குதான் முக்கியத்துவம். ஜெட்லியை தினமும் படிக்கிற வாசகர்கள் கூட எங்களை பாராட்டிருக்காங்க சார். அந்த அளவுக்கு ஆரோக்கியமா தான் நாங்க எழுதுறோம். தனிமனித தாக்குதல் பண்ணவே மாட்டோம்.
சில பிரபல பதிவர்களே "எங்க போஸ்ட்டையும் கலாய்ங்க சாம். படிக்க ஆவலா இருக்கோம்"னு மின்னஞ்சல் அனுப்பியிருந்தாங்க சார். இதுக்கு மேல பக்கி-லீக்ஸ் தரத்தை பத்தி என்ன சார் சொல்லனும்?

ஆனா ஜெட்லி இன்னைக்கு வழக்கம்போல அவரோட பாணில எங்களை திட்டிருக்காரு சார்.கெட்ட கெட்ட வார்த்தையா போட்டு. ஏற்கனவே எங்க முதல் பதிவுல இருந்து கெட்ட வார்த்தையா, வெளியிட முடியாத அளவுக்கு கமண்ட் போட்டுட்டு இருந்தாரு சார். நேத்து உச்சகட்டமா யாரையோ மூணூ பேரை அவர் பயங்கரமா திட்டி எங்களுக்கு கமண்ட் போட்டிருந்தாரு சார். அது வெளியாகிருச்சு. அப்புறம் அந்த மூணு பேரும் எங்களை தொடர்பு கொண்டு கமண்ட் டெலிட் பண்ண சொன்னாங்க சார். பதறியடிச்சு போய் பாத்தா அவ்வளவு அசிங்கம் சார். அப்புறம் உக்காந்து எல்லாத்தையும் அழிச்சோம்.  நாங்க ஜெட்லி மேல கொஞ்சம் மரியாத வச்சிருந்தோம். அவரே கெடுத்துக்கிட்டாரு சார். இன்னைக்கு அவர் ப்ளாக்ல எங்களை திட்டிருக்காரு. அவர் பதிவுகளை எவ்வளவு அழகா spoof பண்ணிருக்கோம் அதுக்கு நல்ல மனசு உள்ளவங்கள் எல்லாம் பாராட்டுவாங்க ஆனா இவரு சும்மாவாச்சும் இருக்கலாம்ல சார். அதவிட்டுட்டு அசிங்கமா பேசி  கேவலமா நடந்துக்குறாரு.

சரி விடுங்க. புதுசா இணைந்திருக்கும் மூன்று நண்பர்களை வரவேற்கிறோம். அவங்க ஏற்கனவே கலாய்ச்சவங்கதான். இந்த தடவ தனிமனித தாக்குதல் இல்லாம எழுதி கொடுக்க சொல்லிருக்கோம். நல்ல ஆரோக்கியமான நகைச்சுவையை ரசிக்கும் வாசகர்களுக்கு இனி நல்ல தீனி கிடைக்கும்.

ஜெட்லி மற்றும் மற்ற பதிவர்களுக்கு வேண்டுகோள்: உங்க பதிவுகளை ஆரோக்கியமான முறையில spoof செய்வது புடிக்கலேனா, "இல்லப்பா. அதை ஏத்துக்குற பக்குவம் எனக்கு இல்ல. என் பதிவுகளை கிண்டல் பண்ணாதீங்க. எனக்கு புடிக்கல"னு சொல்லுங்க சார். நிப்பாட்டிருவோம் உடனே. அதைவிட்டுட்டு அசிங்கமா பேசுனா என்ன சார் அர்த்தம்? அதே வார்த்தைய நாங்க சொல்ல எவ்ளோ நேரம் ஆகும் சொல்லுங்க... 


உண்மையான பேரை சொல்லி எழுதலாமேனு கேக்குறாங்க. அப்படி சொன்னா எங்க மேல முன்முடிவு எடுத்துருவீங்க. அது வந்துருச்சுன்னா நகைச்சுவை எடுபடாது. அதான் சாம் மார்த்தாண்டன் மூலமா எழுதுறோம். எங்க ஆல்டர் ஈகோ தான் மார்த்தாண்டன். இனி முழு வேகத்தில் செயல்படுவான்.

(வாசகர்களுக்கு வேண்டுகோள்: கெட்ட வார்த்தை பின்னூட்டம் போடாதீங்க பாஸ். நேத்து ரொம்ப ஆயிருச்சு. அதான் மட்டுப்படுத்துதல் வச்சுட்டோம். புரிஞ்சுக்கோங்க. எங்களுக்கு கமண்ட் தேவையில்ல. நீங்க சிரிச்சாலே போதும். ஆரம்பிச்ச ஒரே வாரத்துல தினம் 3000 பேருக்கும் மேல படிக்குறீங்க, சிரிக்கிறீங்க. அது போதும் பாஸ். மிக்கநன்றி வாசகாஸ்!)

எழுதிக்கிழிப்பது மட்டுமல்ல நீ.. சிரிக்கத்தெரிந்தால் தான் நீ.... 


EVER YOURS...