ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.

Monday 21 May 2012

கஹானி-2012/ உலக சினிமா/ இந்தியா/ தமிழ்நாடு/கடலூர்/ பின் கோடு 607001

 கஹானி... இந்த படத்தை பற்றி எல்லாரும் விமர்சனம் செய்து விட முடியாது. இந்த படத்தை புரிந்து கொள்ளவதற்கும், விமர்சிப்பதற்கும் என்னை போல் சிலருக்குதான் திறமை உள்ளது பலபேர் கேட்டுக் கொண்டதால் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க எழுதுகிறேன். என்னது கஹானி படத்தை இப்போதான் பார்த்தீர்களா என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது? என்ன செய்வது இடையிரா எழுத்து பணியால் நேரமே இல்லை. ஷாருக்கான் அடுத்த படத்துக்கு ஸ்க்ரிப்ட் , பக்கத்துக்கு வீட்டு LKG பையனுக்கு ஹோம்ஒர்க் , போன்ற கடமைகள் என் கற்பனையை கட்டி போட்டு விட்டன.

கஹானி படத்தை பற்றி பல தகவல்கள் வெளிவந்தன. இருந்தாலும் அந்த படத்தின் போஸ்டர் என்னை ஒன்னும் ஈர்க்கவில்லை. படம் வெளியான நாள் முதல் ஒரே போஸ்டரை ஒட்டி இருந்தார்கள். இருந்தாலும் இந்த படத்தின் இயக்குனர் sujoy ghosh, நான் குறும்படம் எடுத்த பொது இயக்குனர் மணிரத்னம் சிபாரிசுடன் என்னிடம் வாய்ப்பு கேட்டு வந்த பையன். இருந்தாலும் நான் அப்போது இருந்த ஆக்சன் மூட் காரணமாக அந்த பையனை நிராகரித்து விட்டேன். அதனாலேயே அவன் இன்று பாலிவுட் படம் எடுக்க முடிந்தது. (என்னிடம் பணியாற்றி இருந்தால் ஹாலிவுட் படம் கூட எடுத்திருக்கலாம்).

படம் வெளியானவுடன் sujoy ghosh என்னிடம் வந்து நீங்கள் படம் பார்த்து விமர்சனம் எழுதினால் தான் அது தரமாக இருக்கும். மற்ற மீடியா விமர்சனங்களை நான் கண்டு கொள்ள மாட்டேன் என்று அடம் பிடித்தார். சரி கழுதைய... ஒரு விமர்சனம் எழுதி தொலைவோம் என்று முடிவு செய்தேன்.

அதுமட்டும் இல்லாமல் படத்தில் நிறைய விஷயங்கள் எனக்கு பிடித்திருந்தது. அவன் இவன் படத்தில் விஷால் பெண் வேடமிட்டு ஒரு பாடலில் ஆடியதற்கே கஷ்டபட்டார் என்ற போது , கஹானி படத்தில் வித்யா பாலன் படம் முழுக்க பெண்ணாக நடித்திருப்பது எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது. சான்சே இல்லை. வித்யா பாலன் அசத்தியிருக்கிறார்.அவ்வை ஷண்முகி படத்தில், ஷன்முகியாக நடித்தவரை விட இவர் சிறப்பாக ஜொலிக்கவில்லை என்றாலும் வித்யா பாலனுக்கு இது ஒரு நல்ல முயற்சி.

கஹானி-2012/இந்தியா திரைப்படத்தின் ஒன்லைன் :

கஹானி ஒரு முழு நீள ஹிந்தி படம்.

கஹானி-2012/இந்தியா திரைப்படத்தின் கதை என்ன??


கல்கத்தா ரயில்வே ஸ்டேஷன் கூட்டத்தில் காணமல் போன கணவரை தேடி வருகிறார் vidhya bhagci (வித்யா பாலன்). அது என்ன பேரு வித்யா பஜ்ஜி?? மிளகாய் பஜ்ஜி , அப்பள பஜ்ஜி என்று? இப்படி எல்லாமா பெயர் வைப்பார்கள்? பஜ்ஜி என்றவுடன் நினைவுக்கு வருகிறது , நான் தினமும் ஆபிசில் இருந்து வீடு திரும்பும் வழியில் ஒரு ஆயா பஜ்ஜி சுட்டு விப்பார்கள். ஒரு நாள் பஜ்ஜி வாங்க சென்றேன் , காசு கொண்டு செல்ல மறந்துவிட்டேன். கடைசியில் ஆயா காலை பிடித்து , கையை பிடித்து கெஞ்சியும் பார்த்தேன்.. பாட்டி மசியவில்லை... கிழவி அசந்த நேரம் பார்த்து ஒரு பஜ்ஜியை லபக் என்று கவ்விக்கொண்டு ஓடினேன்.. உடனே பாட்டி, பஜ்ஜி சுடும் எண்ணையில் ஒரு கரண்டியை மோண்டு மொகரையில் ஊற்றிவிட்டார்..அன்றைக்கு பஜ்ஜி திண்ணும் பழக்கத்தை விட்டவன் இன்றும் தொடர்கிறேன்.

எங்கேயோ போய்டேன் பாருங்க. எங்க விட்டேன் ? ஆங்..

கணவனை தேடி வரும் வித்யா பாலன் அப்படியே பெண் வேடத்தில் அசத்தியிருக்கிறார். கணவன் தங்கியிருந்த இடம், சாப்பிட்ட உணவங்கம் போன்ற இடங்களில் தேடுகிறார். இந்த இடங்களில் அவர் தேடியதற்கு பதில் அவர் தொலைந்த இடத்தில் தேடி இருந்தால் படம் முடிந்திருக்கும். படத்தை இழுக்க வேண்டும் என்ற காரணத்தால் இவ்வாறு செய்திருக்கிறார் அனுபவம் இல்லாத இயக்குனர்.

படத்தின் சுவாரசியங்களில் சில:



வித்யா பாலன் படத்தில் தமிழ் பெண்ணாக நடித்திருக்கிறார்.. ஒரு சில இடங்களில் ஓரிரு தமிழ் வார்த்தைகளை பேசி டச் செய்கிறார். எனக்கு புரிந்த அந்த ஓரிரு வார்த்தைகளை வைத்தே குத்துமதிப்பாக கதை இதுவாகத்தான் இருக்கும் என கணித்துவிட்டு விமர்சனமும் எழுதிவிட்டேன்.

லண்டனில் இருந்து தொலைபேசியில் கணவனிடம் பேசிய வித்யா , தங்கியிருந்த இடம் , பொம்மை போன்றவற்றை பற்றி பேசியிருக்கிறார். அனால் முக்கியமான விஷயமான அவர் தொலைந்த இடத்தை கேட்கவில்லை , கேட்டிருந்தால் தேடல் சுலபமாக முடிந்திருக்கும்.

அதே போல் படத்தில் ஆங்காங்கே சிறு நெருடல்கள் உள்ளன. வித்யா பாலனுக்கு உதவும் போலிஸ் அதிகாரி வெள்ளை நிறத்தில் யுனிபார்ம் அணிந்திருக்கிறார். அவர் மட்டும் அல்ல ஒட்டுமொத்த காவல்துறையே அப்படிதான் யுனிபார்ம் அணிந்திருகிரார்கள். இது காவல் துறைக்கே ஏற்பட்ட கலங்கம்.

மேலும் வித்யா தங்கி இருக்கும் விடுதியில் ஹீட்டர் வேலை செய்யவில்லை , கேப் வசதி , இண்டர்காம் வசதி இல்லை. இது போன்ற ஒரு விடுதியில் தான் ஒரு லேடி சூப்பர் ஸ்டார் என்ற கர்வம் கொஞ்சம் கூட இல்லாமல் நடித்திருக்கிறார்.

படத்தில் சின்ன சின்ன கேரக்டர்களை கூட அருமையாக செதுக்கியிருக்கிறார்கள். குறிப்பாக க்ளைமாக்ஸில் திருவிழா கூட்டத்தில் மூணாவது வரிசையில் நாலாவதாக நின்றிருந்த பெண்மணியின் அசத்தலான நடிப்பு... வரே வா




பேக்கு போல கொலைசெய்ய வரும் கொலைக்காரனை பார்க்கும் போது செம காமெடியாக இருந்தது... ஒரு நிமிடம் என்னை நானே திரையில் பார்ப்பது போன்ற உணர்வு. அருமையான செலெக்ஷன்.
                                                                                                                                                                 
கிளைமாக்ஸீல் கற்பிணி வித்யாபாலன் வில்லனை தேடி ஓடிக் கொண்டிருக்கும் போது  அவசரமாக ஒண்ணுக்கு முட்டியாதால் பாத்ரூமுக்கு சென்று விட்டேன்..  திரும்பி வரும்போது வித்யாபாலன் flat ஆன வயிறுடன் இருந்தார்.. வேகமாக ஓடியதால் வழியிலேயே ப்ரசவம் ஆகியிருக்க வேண்டும் என்பதை கண்டுபிடித்துவிட்டேன்.. பிரசவம் ஆன கையோடு வித்யாபாலன் மறுபடியும் எழுந்து ஓடினார். பிரசவமான பெண்ணால் எப்படி உடனே ஓட முடியும்இவ்வளவு அருமையான படம் எடுத்த டைரக்டர் இவ்வளவு பெரிய  லாஜிக் மிஸ்டேக்கை கண்டுகொள்ளாமல் விட்டது ஏன் என்று புரியவில்லை.  கடைசிவரை குழந்தையை காட்டுவார்கள் என்று காத்திருந்த எனக்கு மிஞ்சியது ஏமாற்றம் தான்.


படக்குழுவினர் விபரம்.

Music by : Music director
Produced by : Producer
Directed by  : Director
Edited by  : Editor
Written by : Writer
Acted by  : Actors 
             &
Distributed by : Distributors


படத்தை திருட்டு டிவிடி யில் பார்த்தவர்கள்   : ஜெட்லி சேகர் & கோ
திருட்டு விசிடியை வாடகைக்கு ஓசியில் தந்தவர்  :  பஜன்லால் சேட், பர்மா பஜார்
சவுண்ட் எபெக்ட் : கலைஞர் அரசின்     வண்ண  தொலைக்காட்சி



பைனல் கிக் :


எப்பாடு பட்டாவது படத்தை பார்த்து விட வேண்டும் என்ற காரணத்தால் நிறைய வாசகர் கடிதம் எழுதி அதில் வந்த வருமானத்தின் மூலம் சென்னை மூலக்கடை பஜன்லால் சேட் வைத்திருக்கும் பஹுத் குஷி திருட்டு சிடி கடையில் வாங்கி குடும்பத்தோடு பார்த்தோம். நீங்களும் வாங்கி பாருங்கள்.படம் பார்த்து நான் பஜன்லால் இடம் சென்று சிடியை தூக்கி எரிந்து, "என்னையா படம் முழுக்க ஹிந்தியில் பேசுகிறார்கள்" என்று கேட்டேன் அதற்க்கு பஜன்லால் சேட் வாயிலிருந்த பீடாவோடு என் மூஞ்சியில் புளிச்சென துப்பினார். அதுவே பினால் கிக்காக அமைந்தது.

படம் எவ்வளவு தான் நன்றாக இருந்தாலும் படத்தில் எதிர்பார்த்த அளவு பிட்டுகள் இல்லாததால் படத்தை பார்க்கக் கூடாத படங்களின் வரிசையில் சேர்க்கிறேன்.

பிரியங்காவுடன்..
சாம் மார்த்தாண்டன்  



பெண்ணை பார்ப்பது அல்ல நீ !
கையைப் பிடித்து இழுத்து செருப்படி வாங்குவதே நீ !! 


EVER EVERS









Saturday 19 May 2012

மப்புக்காத்து-13

நாகரிகமுள்ள மனிதர்களோடு தான் இந்த பூமியில் வாழ வேண்டி இருக்கிறது. அவர்களை புறக்கணித்து விட்டு வாழ்வதில்தான் நம் திறமை அடங்கி இருக்கிறது. என் அம்மா என் வார்த்தை ஜாலத்தை கண்டு அடிக்கடி என்னிடம்  , தெருவில் ஓடுற சாக்கடையை  விட உன் வாய்ல தான்டா அதிகமா ஓடுதுன்னு சொல்லுவாங்க...முன்பு போல வார்த்தை  அள்ளி தெளிக்க முடியவில்லை, வயதானதால் வந்த பக்குவம் போல... த்தா....  வாய்ல முன்னாடி மாதிரி வரமாடேங்குது.. எந்த ..ம்மா சாபம் விட்டானோ..சரி அத விடுங்க...

நாங்கள் வசித்தது குப்பம் என்பதால் யாருக்கும் பட்டா கிடையாது... அதிகமான குடிசைகள் என்பதால் கதவுகள் இருக்காது. அதனால் யார் வேண்டுமானாலும் எந்த  வீட்டுக்குள்ளும் போய் சோற்றை திருடி திங்கலாம்... அதனால் சண்டைகள் அதிகமாக  நடக்கும். அப்போது கெட்டவார்த்தைகள் சரளமாக தெறிக்கும்... அதுவும் நான் இருக்கும் ஏரியா என்பதால் சற்று அதிகமாகவே தெறிக்கும். காலையில் நம்ம சோத்த திருடி தின்னுட்டு இப்ப நம்மளையே என்ன பேச்சு பேசுது பாருன்னு என்னை நிறைய பேர் வியப்போடு பார்பார்கள்.

அம்மா அடிக்கடி எனக்கு திருஷ்டி சுற்றி போட்ட காலமும் உண்டு. இனிமேல் இந்த ஏரியாவில் இருந்தால் ஏரியா கேட்டு போய் விடும் என்ற காரணத்தால் எல்லாரும் சேர்ந்து என்னை ஹாஸ்டலில் சேர்க்க முடிவு செய்து கவுன்சிலரிடம்  முறையிட்டனர். எத்தனை நாள்தான் ஒரே ஏரியாவில் திருடி திண்பது ஒரு சேஞ்சுக்கு  வேற ஏரியா போவோம் என்ற என் அம்மா வார்த்தைக்கு கட்டுப்பட்டு வேறு ஏரியா  செல்ல முடிவு செய்தோம். இந்த முடிவால் கவுன்சிலர் குடும்பம் என் அப்பா வார்த்தையிலிருந்து தப்பியது.

ஒரு வழியாக அடுத்த ஏரியாக்கு வந்தோம். பக்கத்துக்கு வீட்டுகாரங்க எங்கள மாதிரி இல்ல. எதோ நல்ல குடும்பம்னு சொல்லிகிட்டாங்க. ஒரு நாள்  காலைல எங்களுக்கும் எங்க பக்கத்துக்கு வீட்டுக்காரங்களுக்கும் பிரச்சனை. அந்த பிரச்சனைக்கு காரணம் ஒரு கோவணம். எங்கள் வீட்டு கொடியில் காயப்போட்டிருந்த கோவணம் அவர்கள் கோடியில் போய் விழுந்ததுதான் சண்டைக்கான காரணம். போலிஸ் ஸ்டேஷன் வரை சென்று பொய் புகார் கொடுத்தார்கள், அதாவது நாங்கள் தான் அவர்களை விரட்டி அடிக்க அந்த கோவணத்தை அவர்கள் கொடியில் போட்டதாக  புகார் அளித்தார்கள்.

 ராசியான எங்கள் கோவணத்தை அவர்களுக்கு கொடுக்க நாங்க என்ன முட்டா.... யா?? கடைசியில் போலிஸ் எங்களை சமாதானபடுத்தி அனுப்பினார்கள். என் அப்பா மனம் வெறுத்து போனார். எத்தனையோ நாட்கள் அவர்கள் மாடியில் காயப்போட்டிருந்த வடகம் ,வத்தல், மாட்டுக்கு வாய்த்த கஞ்சி போன்றவைகளை திருடி தின்றபோதெல்லாம் பிரச்சனை இல்லை.அனால் இன்று ஒரு சின்ன கோவணதிர்காக இவ்ளோ பெரிய பிரச்சனையா என்று வருத்தப்பட்டார்.  

பிரச்சனையான நாள் முதல் அவர்கள் வடகம், வத்தல் ஏன் மாட்டுக்கு கஞ்சி ஊற்றுவதை கூட நிறுத்திவிட்டார்கள். இந்த சம்பவம் எங்களை பெரிதும் பாதித்தது.வெறுப்பில் இருந்த என் அப்பா ... த்தா.. நானும் எத்தனையோ வீட்ல திருடி தின்னுருப்பேன் அவைங்களும் கண்டுபுடிச்சு நாராசமா திட்டிட்டு அடுத்தநாள் வழக்கம் போல திருடி திங்க ஏதாச்சும் வச்சிருபாங்க. ஆனா இந்த ம்மா.. அவன் புத்திய காட்டிட்டான்  என்று மிகுந்த வருத்ததோடு சொன்னார். ஆனால் அவர்கள் இப்படி செய்திருக்க வேண்டியது இல்லை. அப்பாவை சமாதான படுத்துவதற்காக அம்மா . விடுங்க எல்லாத்தையும் நம்ம பாடிகார்ட் முனிஸ்வரன் இருக்கான்  அவன் பாத்துக்குவான் என்றார். எங்கள் கோவணத்து மேல் அவர்களுக்கு என்ன அப்படி ஒரு வெறுப்பு  என்று தெரியவில்லை.

கோவணம்... ஒரு சின்ன பிளாஷ்பேக்...

நான் என் அம்மா வயிற்றில் இருந்த நேரம் அது.. என்ன அம்மாவும் அப்பாவும் ஊர் சந்தைக்கு சென்றனர்.வழக்கம் போல் கைக்கு அகப்படும் பொருளுடன் வீடு திரும்ப திட்டமிட்டிருந்தார்கள். அப்போது அவர்கள்  கண்ணில் முதலில் தென்பட்டது ஒரு துணி கடை. கூட்டம் அலை மோதியது. உள்ளே நுழைய கூட இடம் இல்லை . கடுப்பில் இருந்த என் அப்பா ..த்தா காசு கொடுத்து வாங்குறதுக்கு என்ன அலை அலையிருனானுங்க  பாரு  என்று என் அம்மாவிடம் சொன்னாராம் . அதை அடிக்கடி என் அம்மா என்னிடம் சொல்லி ரசிப்பார்.அடித்து பிடித்து உள்ளே சென்ற என் அப்பா வேட்டி ஒன்றை எடுத்து செல்ல முடிவு செய்தார்.  கடைக்காரன் பிஸியாக  இருந்த நேரம் பார்த்து லபக்கென்று ஒரு வேட்டியை உருவிவிட்டு வெற்றிக்களிப்போடு
 வெளியே சென்றார்.

திடீரென்று ரெண்டு பேர் வந்து என் அப்பாவை உள்ளே இழுத்து சென்றனர். கையிலிருக்கும் வேட்டி  நான் வாங்கியது . திருடியதில்லை என்று எவ்வளவோ போராடினார்.  கடைசியில் தான் தெரிந்தது அவர் உருவியது கடைக்காரன் காட்டிய வேட்டி இல்லை , கட்டியிருந்த வேட்டியை என்று. சூழ்நிலையை  உணர்ந்த என் அப்பா கடைசியில் வேறு வழி இல்லாமல் அந்த கடையில் ஏதாவது வாங்க வேண்டுமே என்று ஒரு துண்டு ஒன்றை வாங்கினார். பிறக்கபோகும் எனக்கு உபயோகப்படட்டும் என்று அதை வைத்திருந்தார்கள்.

நான் பிறந்தபோது துண்டாய்  இருந்தது நான் வளர்ந்த பின் கோவணமாக மாறியது. ஆதலால் என்னுடனே சேர்ந்து வளர்த்தது அந்த துண்டு. நாளடைவில் எங்கள் குடும்ப உருபினராகவே மாறியது.எங்கே துவைத்தால் சுருங்கி விடுமோ என்ற ஐயத்தால் இதனை ஆண்டுகளாக பத்திரமாக வெறுமனே காயபோட்டு மாட்டும் எடுப்போம்.அவ்ளோ அக்கறை அதன்  மீது எங்களுக்கு. நீங்கள் யாரும் அதை பார்த்தால் பழைய கோவணம் என்று சொல்லவே முடியாது அந்த அளவுக்கு அருமையாக இருக்கும். சிறு காலம் துவைக்காமல் விட்டதால் கொஞ்சம் வாசம் அடிக்கும். அதுவே பல பேருக்கு பொறமை.

 நாங்கள் பழைய ஏரியாவில் இருந்து இங்கு வந்ததுக்கு அந்த பொறாமையும் ஒரு காரணம்.இப்போ இந்த  பக்கத்துக்கு வீட்டுக்காரனும் அப்படியே அமைந்துவிட்டான். நான் கோவை சென்றவுடன் நானும் என் கோவணமும் பிரிய நேரிட்டது. அந்த துயரம் என்னால் தாங்க முடியவில்லை. தினமும் வீட்டுக்கு போன் செய்து கோவணம்  பற்றி தவறாமல் விசாரிப்பேன்.

எனக்கு ஆபிசில் கிடைத்த போனஸ் பணத்தை வைத்து புதுசாக ரெண்டு கோவணம் வாங்கியது , பக்கத்துக்கு வீட்டுக்காரனுக்கு மேலும் வயித்தெரிச்சலை உண்டாகியது.புயல் தாக்கியபோது துடித்துவிட்டேன். என் கோவணத்திற்கு ஏதும் ஆபத்து வந்து விடுமோ என்று. நல்ல வேலையாக யாருக்கும் தீங்கு நினைக்காத மனம் உள்ளதால் அப்படி ஒன்றும் அசம்பாவிதம் நடக்கவில்லை. நீண்ட நாள் பிறகு கோவையில் இருந்து  என் வீட்டுக்கு சென்றேன் எதிர் வீட்டுக்கு புதுசாக ஒரு பாய் ஆளுக வந்திருக்காங்க வந்தேனா பிரியாணி எடுத்து சாப்பிடலாம்னு சொன்னதும் ஆசையோடு சென்றேன்.

போன இடத்தில மாடிக்கு பொய் நம்ம கோவணத்தை பாப்போம் என்று ஆவலாக சென்ற எனக்கு இதயமே வெடித்தது போல் இருந்தது. ஆம்.. என் கோவணம் சுக்குநூறாக கிழிந்து கிடந்தது. அதை உத்து பார்த்து எதோ நாய் கடிச்சி போற்றுக்கும்பா என்று  நம்பகமானவர்கள் சொன்னார்கள். அப்போதுதான் எனக்கு தெரிய வந்தது பக்கத்துக்கு வீட்டுக்காரன்  புதிதாக நாய் வாங்கியிருப்பதாக. எங்களை பழிவாங்க இந்த வழி தான் கிடைத்ததா அவனுக்கு??

ஒரு பாவமும் அறியாத அந்த கோவணம் என்ன தவறு செய்தது?

பாடிகார்ட் முனிஸ்வரன் பார்த்துக்கொண்டே தான் இருக்க போகிறானா??