ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.

Thursday 15 December 2011

வாசகர் கடிதப் போட்டி - மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்


"என்னபா எவ்ளோ சிக்கலான விதிமுறைங்கள வச்சிருக்கீங்க... இதுக்கு ஒரு 10 வாசகர் கடிதம் வந்தாலே உங்க முயற்சி வெற்றின்னு நெனச்சிக்கோங்க"

வாசகர் கடிதப் போட்டி அறிவித்த உடனேயே சாம் மார்த்தாண்டனுக்கு ட்வீட்டரில் வந்த போன் கால்கள் இந்த செய்தியைத்தான் தந்தன.

ஆனால் அவ்வாறு கேட்டவர்கள் முகத்தில் கரியை அள்ளி பூசியிருக்கிறது ரசிகர்கள் இந்தவாசகர்  கடிதப்போட்டிக்கு தந்த ஆதரவு. இதுவரை சுமார் இரண்டு லட்சத்து இருபத்து எழாயிரத்து ஐநூற்று நாற்பது (2,27,540) வாசகர் கடிதங்கள் வந்து குவிந்துள்ளன.

இவை அனைத்தும் போட்டி விதிமுறைக்கு உட்பட்டு சரியான நேரத்தில் அனுப்பப்பட்ட கடிதங்கள். இது தவிற விதிமுறையை தாண்டி ஜெட்லியை கயிவி கயிவி ஊற்றி எழுதப்பட்ட சுமார் மூன்று லட்சம் கடிதங்களும், நேற்று 12 மணிக்கு பிறகு 2 மைக்ரோ செகண்டுகள் தாண்டி வந்த சுமார் எழுபத்தைந்தாயிரம் கடிதங்களும் போட்டியிலிருந்து நிராகரிக்கப்ப்ட்டுள்ளன.

இவற்றில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஜெட்லிக்கு உள்ளூர் ரசிகர்களை விட அயல்நாட்டு ரசிகர்களிடமிருந்தே அதிக கடிதங்கள் வந்துள்ளன. குறிப்பாக உகாண்டா, ரவாண்டா, எத்யோப்பியா, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டிஸ் போன்ற நாடுகளிலிருந்து வந்திருக்கும் கடிதங்கள் மட்டும் ஒரு லட்சத்தை தாண்டும்.

இதோடு மட்டுமல்லாமல், திருவள்ளுவர், கம்பர், ஒட்டக்கூத்தர், போதி தர்மர், ஆப்ரகாம் லிங்கன், நெல்சன் மண்டேலா, சதாம் உசேன், சாலமன் பாப்பையா, கலைஞர் போன்றோரும் இந்த வாசகர் கடித போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டது காலம் கடந்து ஜெட்லியின் எழுத்தாற்றலுக்கு இருக்கும் சக்தியை நிரூபித்து காட்டுகிறது.

எனவே கடிதங்களை அலசி ஆராய்ந்து பரிசு கொடுக்க வேண்டும் என முடிவு செய்தால் அடுத்த ஆண்டு மட்டுமே முடிவுகளை வெளியிட முடியும் என்ற காரணத்தால், குலுக்கல் முறையில் மூன்று கடிதங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றன. பதிவின் நீளம் கருதி மூன்றாம் பரிசு பெற்ற கடிதம் தற்பொழுது உங்களுக்காக. முதல் இரண்டு கடிதங்கள் அடுத்த பதிவில்.

வெற்றி பெற்ற அனைவருக்கும் சாம் மார்த்தாண்டன் சார்பாகவும், உடான்ஸ் வரட்டி ச்ச திரட்டி சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். போட்டியில் வெற்றி பெறாதவர்கள் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் சென்று விட வேண்டாம். அடுத்த வருடமும் உங்களுக்காக போட்டி நிச்சயம் உண்டு.

மூண்றாம் பரிசு:

கடிதத்தை எழுதியவர் : திரு பாண பத்திர ஓணாண்டி


ஜெட்லி! மா ஜெட்லி!! நீ ஒரு மாமா ஜெட்லி!!!

பூ மாரி தேன் மாரி நான் பொழியும் நீ ஒரு மொள்ளமாறி!!

பதிவுலகில் நீ தெள்ளியதோர் முடிச்சவிக்கி !!

தேடிவரும் பதிவர்களுக்கு நீ மூடா!!

நெடும் பதிவு உன் பதிவு

என்றும் மூடாமல் மறைக்காமல் நீ உதவு

எதிர்த்து நிற்கும் அனானிகளை நீ புண்ணாக்கு

மண்ணோடு மண்ணாக்கு !!

இந்த பதிவுலகை அடை காக்கும் அண்டங்காக்கையே !!

ஆயிரம் பதிவு கண்ட அபூர்வ சிந்தாமணியே.!!

நீர் வாழ்க! உன் பதிவுகள் வாழ்க!!!

5 comments:

நாய் நக்ஸ் said...

Avvalavu sirappa illaiye.....
Expecting more...

பிரபல பதிவர் said...

யோவ் யாருய்யா நீயி,,,,

காலங்காத்தாலே இப்பிடி சிரிப்பு மூட்டுறே....

செமயா இருக்கு.... ஒருத்தர மட்டும் கலாய்க்காம சும்மா எல்லோரையும் கலாய்க்கலாமே

ரசிகன் said...

super..........

Anonymous said...

nice

இவரு பெரிய வெண்ணை said...

ஏன் உங்களுக்கு நாலு கம்மேன்ட்க்கு மேல வர மாட்டேங்குது... ஒரு வேல ஜெட்லி ரசிகர்கள் காசு கொடுத்து உங்கள கமண்ட்ட அழிக்க சொல்லுறாங்களா ?

Post a Comment

இங்கு கமண்ட் செய்பவர்கள் கண்டிப்பாக என் உலகப்படமான "பரசுராம் வயது 95" படத்தை பார்த்திருக்க வேண்டும். நன்றி