ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.

Saturday 5 April 2014

Oru panniyum Moonu pannadaiyum / 2014 ஒரு பன்னியும் மூணு பண்ணாடையும் சினிமா விமர்சனம்!!!

ஜெர்மன் இயக்குனர்  dooma goli அவருடைய 14 வருட மெயின் ஸ்டீரீம் சினிமா கேரியல் (ஆமா கேரியலு, மட் கார்டு, சைக்கிள் ரிம்முன்னுட்டு) முத்தான நான்கு பிட்டுப் பாடங்களை கொடுத்து இருக்கின்றார்.... ஹேவன்,ரன் லோ லா ரன், பர்பியூம்,இன்டர்னேஷனல்.  போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்...  இதுல  ஹேவன் மற்றும் இன்டர்நேஷனல் படத்தை பத்தி நம்ம பிட்டு பட விமர்சன  தளத்திலேயே எற்கனவே நான்   எழுதி இருக்கின்றேன்..


ரைட் ....Dooma goli  இயக்கி பல பிட்டு படங்கள்  தமிழ் நாட்டில்  பட்டி தொட்டியெங்கும் பேமஸ் ஆகாத கால காட்டமான ,1998 லேயே திருட்டு வீடியோ கேசட் வாங்கி அவற்றை நான் பார்த்திருக்கிறேன்.  அவர் இயக்கத்தில் வெளி வந்த  திரைப்படதான் ரன் லோ ரன்... புல் பெக்குல   அகிராவோட ரோஷமன் படத்தை  பத்தி ரொம்ப   யோசிக்கும் பொழுது இந்த படத்தின் நாட்டை பிடித்து  அவர்  பிடித்து இருக்கலாம் என்பது என் அனுமானம்... (ஃபுல் பெக்குலயா – பக்கி.. இத மாதிரியே எல்லாரையும் நெனைச்சிகிட்டு இருக்கும் போல)

 ரன் லோலா ரன்  படத்தின் கதை ....  நிறைய முறை படத்தை பார்த்துவிட்டேன். ஆனால் கதை என்னவென்று இன்று வரை தெரியவில்லை. மியூட் செய்து கூட வைத்து பார்த்தேன். சத்தியமாக புரியவில்லை. ஆனால் பட்த்தின் குமால்டி காட்சிகள் மட்டும் இன்னும் கண்முன்னேயே வந்து வந்து செல்கின்றன.

இந்த பிளாட்டை தமிழில் யாரும் தொட்டுப்பார்க்கவில்லை...  ஏனென்றால் இந்த பிளாட் 35 வது மாடியில் இருக்கிறது. ஆனால் அதை சிம்புதேவன் தொட்டு இருக்கின்றார்... லிஃப்டில் வந்திருப்பார் என ஊகிக்கிறேன். அதற்காகவே  அவரை  பாராட்டலாம்.. ஆனால் அதை எக்சிபிட் பண்ண விதத்தில், ஆர்ட்டிஸ்டுகளை தேர்ந்து எடுத்த விதத்தில் கோட்டை விட்டு இருக்கின்றார். நானாக இருந்தால் கோட்டை நன்றாக கிழித்திருப்பேன்.


பார்ன் இன் சில்வர் சட்டி நடிகர் அருள் நிதியை  வைத்து இந்தஅளவுக்கு வேலை வாங்கியதே  பெரிய விஷயம்தான்...  ஆனால் ஒரு பரபரப்பான பிளாட் கதையில் பிளாக் ஹீயுமரையும் (பிளாட் கதையில பிளாக் ஹீயுமரா – ஆங்கிலம் இனி மெல்லச் சாகும்) சேர்த்து விட்டதால் பரபரப்பு இல்லாமல் சுவாரஸ்யமற்று அர்த்த நாரிஸ்வரராக (டேய் நாதாரி.. அர்த்த நாரிஸ்வரர் பேர இப்புடி நாரடிக்குதே இது)  இருக்கின்றது என்பதே உண்மை....


ஆனால் இதில்  பெண்ணை சார்ச்சில் கடத்த போகின்றோம் என்று டைம் குறித்து  விட்டு,  கேஷுவலாக ஆஸ்பிட்டல் போவது... அப்பார்ட்மென்ட்டில் இருந்து   கிளம்பும் போது எதிர்படும் ஆட்களிடம்  சாவகாசமாக பேசி விட்டு செல்வது என்பதுதான்  படத்தின் பலவீனம்.. இப்படித்தான் சாவகாசமாக ரிலாக்சாக (ஆமா சாவகாசமாக ரிலாக்ஸாக கூலாக மெதுவாக இன்னும் நாலஞ்சி வார்த்தைய கூட சேத்துக்குங்க)  போக போகின்றார்கள் என்றால் அப்புறம் எதுக்கும் அப்பார்ட்மென்ட்டில் இருந்து ஓட வேண்டும்... நடராஜின் பின்னனி இசைக்கு ஒரு டெம்பான ஷாட் வேண்டும் என்பதற்காக எடுத்தது போல இருக்கின்றது... (டெம்பான ஷாட்டா? தோணி அடிக்கிற ஷாட்டா இருக்கும் போல)

பட் சந்திக்கும் அத்தனை கேரகடர்களும் முத்திரை பதிக்கின்றார்கள்... சொர சொர வென நகரும் கதையை எடுத்துக்கொண்டு அதில் பிளாக் ஹீயுமர் மற்றும் சிவன் நாராதர் என்று ஜல்லி அடித்து இருக்க வேண்டாம்... ஜல்லிக்கு பதிலாக கொஞ்சம் மணலும் செங்கலும் அடித்திருக்கலாம். அது எல்லாமே டெம்போவை கெடுக்கின்றது என்பதுதான் உண்மை... டெம்போவுக்கு பதிலாக ஒரு ஜீப்பை வாங்கி விட்டிருக்கலாம்.

ஒரு அவசரமான காரியம்... திருச்சிக்கு போக வேண்டும்... போயே ஆக வேண்டும் ... அவசரம்னா சனியனே இங்கயே போகவேண்டியது தானே.. திருச்சிக்கு போயிதான் போவியா என நீங்கள் என்னை வசை பாடக்கூடாது


விரைவு பேருந்து  என்று அழைக்கப்படும் பாயின்ட்  டூ பாயிண்ட் ( விரைவு பேருந்து என அழைக்ப்படும் பாயிண்ட் டூ பாயிண்டா – சூப்பரு.. ஒரு பய சொன்னதில்லை) பேருந்தில்  ஏறி உட்கார்ந்தும் விடுகின்றீர்கள்... இந்தனைக்கு ஐந்தரை மணி நேரம்  பயண நேரம் என்று கொட்டை எழுத்தில் பேருந்தில் எழுதி இருக்கின்றார்கள்..... அப்படி என்றால் அந்த பேருந்து 100 இல் பறக்க வேண்டும் அல்லவா? ( ஆமா எந்த பேருந்துல பயண நேரத்த கொட்டை எழுத்துல எழுதிருக்காய்ங்க.. அது சரி பேருந்து எந்த ஊர்லடா பறந்துச்சி)

பேருந்து அரைக்கி அரைக்கி மெதுவாக செல்கின்றது.. தாம்பரம் தாண்டுவதற்க்குள் ஒரு மணி  நேரம் காலி....  பெருங்களத்தூர் தாண்டி கட்டங்கொளத்தூர் எஸ்ஆர்எம் காலேஜை தொடும் போது,இரண்டரை மணி நேரம் காலி.. சரி இதுக்கு  அப்புறம் வேகம் எடுப்பான்னு பார்த்தா... மாமன்டூர்ல போய் வண்டியை போட்டு விட்டு டீ காப்பி டிபன் சாப்பிடறவங்க சாப்பிடலாம் சார்ன்னு சொன்னா?- எப்படி இருக்கும்?-?? (எப்புடி இருக்கும்? நீ எவனாவது டிபன் வாங்கித்தருவாய்ங்களான்னு தேடிகிட்டு இருப்ப)

ஒரு மாதிரி கடுப்பா ஆயிடாது... (ஆமா வாங்கித் தர யாரும் இல்லைன்னா கடுப்பாதான் ஆவும்) அதைதான் படத்துல வரும் காட்சிகள் ஏற்படுத்துகின்றன...

  முதல்  காட்சியில் பெண்ணை  தூக்க திட்டம் போடுவது எல்லாம் அருமை.. அருள்நிதி மிளிர்கின்றார்... ஓட்டமும் ஓகே... நடையும் ஓக்கே…  (இது படம் பாக்க போனிச்சா இல்லை மாப்ள பாக்க போனிச்சா? மிளிருதாம் ஓட்டம் சூப்பராம்.)  எந்த அளவுக்கு பதட்டம் மூஞ்சியில இருக்கனும் அது எதுவுமே   பெரிசா இல்லை.. பைக் எப்படி பறக்கனும் அதுவும் இல்லை...( மறுபடியும் பார்ரா.. பைக் எப்டிடா பறக்கும்? அநேகமா ஃபுல் மப்புல படம் பாத்துருக்கும்னு நெனைக்கிறேன்)


வித்தியாசப்படுத்தறேன்னு ஏகப்பட்ட கேரக்டர்களை இன்வால்வ் பண்ணியது படத்தோட டெப்ட்டை குறைத்து ரசிகர்களை சத்தம் போட வைக்கின்றது...  (டெப்ட்டா? நோட் பண்ணுங்கடா நோட் பண்ணுங்கடா… இந்த வார்த்தையெல்லாம் இனிமேயாது இங்கிலீஸ் டிக்சனரில சேத்துவிடுங்கடா)  பட் படத்தை கொஞ்சமேனும் ரசிக்க வைப்பது.. மியூசிக் டைரக்டர் நட்ராஜ்  மற்றும் வசனங்கள்...


 மூன்று டைப்  காலங்கள்.... அதே ஆட்கள் அதே  சூழ்நிலைகள்  ஆனால் வித்தியாசப்படுத்த வேண்டும்.. அதை மிகசிறப்பாக செய்து இருக்கின்றார்.  வசனங்கள் அருமை.. ஆனா வசனங்கள் எதுவுமே புரியவில்லை

பொறுப்பை எடுத்துக்காம நல்லவனா இருந்து என்ன புரயோஜனம்...
மூன்று லவ்சிக்வென்ஸ்களில்  முதல்   சிக்வென்ஸ் ஆன பாத்ரூமுக்கு காதலி அழைத்து செல்லும் காட்சி செம டச்சிங்காம இருந்தது. அப்புறம்தான் தெரிந்தது பின் சீட்டில் இருந்தவர் என் பின் மண்டையில் காலை வைத்து டச்சிங் செய்தார் என்று.  


=======
பைனல்கிக்..  (ஃபைனல் கிக் உன்ன நிக்கவெச்சி உன் பின்னால தான்டா விடனும்)

பிந்து மாதவி மட்டும் இல்லையென்றால் இன்னமும் போர் அடித்து இருக்கும்...  பிரேமுக்கு பிரேம் ஓடி உற்சாகபடுத்துகின்றார். (என்னடா இன்னுமும் காணுமேன்னு பாத்தேன்.. நீ பல்ல காட்டிக்கிட்டு போனதே அதுக்கு தான)

 படத்தை சமயங்களில் தூக்கி நிறுத்துவது தியேட்டர் வாசலில் இருந்த நான்கு செக்கிரூட்டிகள் தான். கீழே விழுந்த படத்தை நான்கு பேராக சேர்ந்து தூக்கி நிறுத்திக் கொண்டிருந்தனர்.
 அருள்நிதி  நடித்த இரண்டு படங்கள்.... ஓகே ஓகே , மற்றும் கதிர்வேலன் காதல்.... இரண்டுமே அசத்தல்  திரைப்படங்கள்... பெட்டர் லக்  நெக்ஸ்டைம் அருள் மற்றும் சிம்புத்தேவன்..,.

 பட்  ஒரு விஷயம் குறிப்பிடனும்.. 

இப்படி ஒரு விஷயத்தை தமிழ் சினிமாவுல டிரை பண்ணதுக்கு சிம்புதேவனுக்கு ஒரு பூங்கொத்து….. வாங்கிக்குடுக்க என்கிட்ட காசு இல்லை.. யாராவது வாங்கிக்குடுங்க ப்ளீஸ்

எறும்பு கேக்கை தின்று மீதம்  எடுத்துக்கொண்டு  திரும்புவது.

டூட்டி நர்ஸ் நாறி இருப்பது...

முதல் காட்சியில் இடிக்கும்  டாக்டருடைய   கோட்....  அடுத்த டைம் லைன்  காட்சியில் பெட்டி மேல் வைத்து ரிசப்ஷனில்  பேசும் போது அந்த டாக்டர் கோட்டை லபக்குவது.. மரத்தின் மீதான  காக்கைகள்.... என்று நிறைய காட்சிகளில் அட  பொட வைக்கின்றார்கள்... (இதெல்லாம் யாருக்கு புரியும்னு இது எழுதுது? இது லூசா இல்லை நம்ம லூசா? )


ஒரு முறை சினிமா ரசிகர்கள் அவசியம் பார்க்கலாம்...  சினிமாவை ரசிக்காதவர்கள் one time பார்க்கலாம்.  நான் சினிமா ரசிகன் என்பதற்காக ஒரு முறை பார்த்தேன்.


குறிப்பு : நான் ஒரு ஆங்கிலோ இந்தியனாக மாறிக்கொண்டிருக்கின்றேன். அதனால் தான் என்னுடைய பதிவுகளில் ஆங்கில வடை ( வடை இல்லை நாயே வாடை) வீசுகிறது. நண்பர்கள் கோபித்துக் கொள்ள வேண்டாம். எதேனும் வார்த்தைகள் புரியவில்லை என்றால் வாசகர் கடிதம் எழுதவும்