ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.

Monday 9 January 2012

ஆண்வெஜ் அண்டு பெண்வெஜ் 10/1/2012 (05+)

இப்போது தான் போன வருட புத்தாண்டுக்கு சரக்கடித்து விட்டு போலீஸிடம் பட்டக்ஸில் அடி வாங்கியது போல் இருக்கிறது. அதற்குள் 2012 புத்தாண்டு வந்து வந்து விட்டது. வாங்கிய அடியில் நான்கு நாட்கள் மல்லாக்க படுக்க முடியவில்லை. நானும் எவ்வளவு நாள் தான் வலிக்காத மாதிரியே நடிப்பது?
----------------------------------------------------------------------------------------------------

தானே புயல் தானே வந்து தானே சென்றிருக்கிறது. fishermen கள் அதிகமாக பாதிக்கப்படுவதாக தொடர்ந்து மீடியாக்கள் சொல்லி வருகின்றன. ஆனால் மீனவர்கள்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பது என் கருத்து.
-----------------------------------------------------------------------------------------------------

எங்கள் பக்கத்து வீட்டில் சாணி தெளித்து சரிசெய்து வைத்த வாசலை தானே புயல் நாஸ்தி பண்ணிவிட்டு சென்றதால் சித்ரா அக்கா சோகமாக இருந்தாள். நான் அப்போது சென்று "பிம்பிளிக்கா பிய்யாப்பீ..." என்று கேலி செய்தேன். இன்னும் கொஞ்சம் சாணியை  கரைத்து மூஞ்சில் உற்றி விட்டார். உப்பு கொஞ்சம் கம்மியாக இருக்கின்றது என்று கூறினேன். நாளைக்கு வா உப்பு போட்டு ஊற்றுகிறேன் என்றாள். சரி என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
----------------------------------------------------------------------------------------------------------
எப்போது புயல் வந்தாலும் எங்கள் ஊர் கடலூரே அதிகம் பாதிக்கப்படும். ஏனென்றால் எங்கள் ஊரில் புயல் வரும் போது வேகமாக காற்று அடிக்கும். புயல் அடிக்கும் போது எங்கள் வீட்டில் உள்ள பேனை ஆப் செய்து விட்டு ஜன்னலை திறந்து வைத்தால் காற்று நன்றாக வரும் என்று சொல்லியிருந்தேன். பேனை ஆப் செய்தார்களா என தெரியவில்லை. போன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. செல்போன் ஒயர் புயலில் எங்காவது அருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அடுத்த முறை ஒயர் இல்லாத செல்போன் வாங்க வேண்டும் என்பது இந்த புயலின் மூலம் நான் கற்றுக் கொண்ட புத்தி கொள்முதல்.
---------------------------------------------------------------------------------------------------------

கடலூரில் இருக்கும் என் நண்பர் சபாசுக்கு போன் செய்தேன். மச்சி கடலூர் எப்படி இருக்கின்றது என்று கேட்டேன். கடலூரை மிக்ஸியில் போட்டு ஆட்டியது போல் இருக்கு.எல்லா மரமும் முறிஞ்சி கெடக்கு.. எங்க வீட்டு கூரை எல்லாம் பறந்து விட்டது" என்றான். "ஹையா... ஜாலி:" என்றேன். செருப்பால அடி நாயே... மூடிகிட்டு போன வைடா என்றான். நான் பொத்திக்கொண்டு வைத்துவிட்டேன்.

--------------------------------------------------------------------------------------------------------

மாயன் காலண்டரை பற்றி படித்து இருக்கிறேன். இந்த காலண்டரை எழுதியவர் மாயன் படத்தில் நடித்த நடிகர் நாசர் என்பது பலருக்கு தெரியாது. அவர் என் நண்பர். இந்த வருட பொங்கலன்று எனக்கு முக்கியமான வேலை இருப்பாதால் பொங்கலை வேறு தேதிக்கு மாற்றி தருமாறு அவரிடம் கேட்டிருந்தேன். அவரும் யாருக்கும் தெரியாமல் மாயன் காலண்டரில் பொங்கல் பண்டிகையை மார்ச், அல்லது ஏப்ரலுக்கு மாற்றி தருவதாக கூறியுள்ளார். மிக்க நன்றி நாசர்.

----------------------------------------------------------------------------------------------------


இவர் கூட ஒர்க் பண்ண வேண்டும் என்பது எனக்கு சின்ன வயசிலிருந்து ஆசை. ஆனால் இவர் இப்போது தான் பீல்டுக்கு வந்திருக்கிறார். முக்கியமாக காக்க காக்க சூர்யா கெட்டப்பில் வெளியாகியிருக்கும் இவர் போட்டோ சான்சே இல்லாத ரகம். பட் இவர் கூட ஒரு படத்திலாவது ஒர்க் செய்தால் பிறவி பயனை அடைந்ததற்கு சமம்.
----------------------------------------------------------------------------------------------------

கொஞ்ச நாளுக்கு முன்பு பெய்த மழையிலேயே சென்னையின் சாலைகள் சரியாகாத நிலையில் இப்போது புயல் வேறு. காலையில் வண்டியை ஒட்ட முடியவில்லை. காற்று எதிர்த்திசையில் தள்ளுகிறது. கிண்டியிலிருந்து போருர் செல்ல இருந்த என்னை காற்று எதிர் திசையில் தள்ளி ஸ்பென்சர் ப்ளாசா வரை கொண்டு சென்று விட்டது. உடனே மூளையை உபயோகித்து, ஸ்பென்சரிலிருந்து சென்ரலுக்கு வண்டியை ஒட்ட தொடங்கினால் காற்று எதிர் திசையில் அடித்து போரூருக்கு போய்விடலாம் என்று விரட்டினேன். சென்ட்ரல் வந்துவிட்டது.

------------------------------------------------------------------------------------------------
காலையில் மனைவியை ட்ராப் செய்ய வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது சிக்னல் போட்டார்கள். நான் ப்ரேக் அடித்து சிக்னலில் வண்டியை நிறுத்திவிட்டேன். நல்ல வேளை வண்டியில் ப்ரேக் இருந்தது. இல்லாவிட்டால் மாமாவிடம் மாட்டி  இருப்போம். நன்றி கடவுளே...

------------------------------------------------------------------------------------------------------
பிலாசபி பாண்டி:
எவன் ஒருத்தன் நான் லோக்கலு லோக்கலு என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்றானோ அவன்கிட்ட உசாரையா உசாரு.




----------------------------------------------------------------------------------------

இந்த வார (எடிட் செய்யப்படாத) வாசகியின் கடிதம் 



மை டியர் மார்த்தாண்ட சாம், 
தங்கள் வாசகர் கடிதப்போட்டி அறிவிப்பை கண்ட உற்சாகத்தில்  தருமியை விட சொல்லொண்ணா படபடப்பில் வீதியெங்கும் ஓடோடி உறுமினேன். நான்  வலைப்பூ எதுவும் வைத்திருக்கவில்லை. ஜெட்லி பதிவை நித்தம் படிக்கையில் தானாகவே ரெண்டு முழம் மல்லிப்பூ என் காதில் லான்ட் ஆகிவிடுகிறது.  உங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இதோ என் வாசகர் 'கடி'தம்:

 -- சீனத்து ஜெட்லி போதிதர்மன் அருளால் ஜெட்லி சேகரின் முதல் பெண் வாசகி ஆயி (கணினி தானாகவே இடாலிக் பாண்டுக்கு மாற்றிவிட்டது. நான் எதுவும் செய்யவில்லை) இன்றோடு 45 வருடம் 1 நாள் பூர்த்தி ஆகிவிட்டது. நான் வசிப்பது எத்தியோப்பியாவில். தொழில்:உ(டான்சர்). ஆதாரம்: http://www.youtube.com/watch?v=-1yrons-RRE.    

-- உலகம் என் பப்லு குட்டி ஜெட்லியை 1000 சொன்னாலும், ஆயி,ரம் (கணினி பிரச்னை. மன்னிக்கவும்) பதிவிட்ட அபூர்வ சிகாமணியாக எங்கள் நொந்த'கும்'மாரன்  ஆனது சரித்திரம். 
-- மைனஸ் நான்காம் நூற்றாண்டிலேயே ரெட் ஒன் கேமராவை தோலில் சுமந்து தொளில் செய்ய வேண்டும் என்பது என் லட்சியமாக இருந்தது. அசோக்குமார், ராஜீவ் மேனன், பி.சி. ஸ்ரீராம் என ஏகப்பட்ட ஆட்கள் வந்து சென்றாலும், எனக்குள்  ஏதோ ஒரு உறுத்தல். பெண்களை எசகுபிசகான ஆங்கிளில் 'எக்ஸ்ட்ரா ஆடுநரியாக' படம் பிடிக்க ஒருவரும் இன்னும் பிறக்கவில்லையா என்று பிலடெல்பியா பிருந்தாவனத்தில் குத்த வைத்துக்கொண்டு நொந்த நேரத்தில் என் தோலை பிசைந்து ஆறுதல் சொன்னது ஒரு உள்ளம். எஸ். ஹீ இஸ் ஜெட்லி சேகர்.

-- 2008 ஏப்ரல் 14 ஆம் தேதி.  என் மடியில் அவர் அமர, அவர் மடியில் மடிக்கணினி அமர, அமரர் சுஜாதாவிற்கு சமர்பணம் செய்து முதல் பதிவை இட்டார். சமர் பணம் என்பது உங்க நாட்டு கரன்சி பெயரா என்று கேட்டதற்கு லேசாக சிரித்துவிட்டு 'இனி பிலை இண்றி எழுதுகிறேன்' என  தமிழ்ப்புத்தாண்டான ஏப்ரல் 14 அன்று (அவர்) நெஞ்சைத்தொட்டு சத்தியம் செய்தார். அது என் நெஞ்சை தொட்டது. அந்த பதிவிற்கு முதல் கமன்ட் போட்டவர் தி டர்டி கேர்ல் சில்க் ஸ்மிதா. நம்பாவிடில் செக் செய்துகொள்க. 

-- தெற்காசியா வந்தபோது ஒரு நாள் அவர் வீட்டிற்கு சென்றேன். தாமஸ் அல்வா எடிசன் யூஸ் செய்த கேமரா கண்ணடியின் சிறு பகுதியை வீட்டு வாசலில் தொங்க விட்டிருந்தார். அதில் சூரிய ஒளிபட்டு எதிர்வீட்டு ஜிகிடியின் பெட்ரூமில் ரிப்ளக்ட் ஆகும் வண்ணம் ஆங்கிள் வைத்திருந்தார் என் செல்லம். வாட் எ கிரியேட்டி வெட்டி. தட் இஸ் ஜெட்லி!!

-- அவருடைய ப(டை)ப்புகளில் என்னை சிந்திக்க வைத்த டாப் 5 பட்டியல்:

    
     
   அவதாரில் வொர்க் செய்த டெக்னீசியன்களை விட அதிக எண்ணிக்கையில்  
   ஜெட்லியை பாராட்டிய உள்ளங்கள்(இன்றுவரை அவரை ஓட்டுகிறார்கள் 
   என்று தெரியாமல் இருக்கும் பப்லு குட்டி...உன்ன நெனச்சா எனக்கு அழுகை 
   பீறிட்டு வருது)  
      

    ஜெட்லி படைப்பு.. களவாடிய பொழுதுகள்:  
-- ஆயிரம் பதிவு கண்டபின்னும் தனது ஸ்டைலை மாற்றாத மின்சார கண்ணா. ஐ லவ் யூ. ஒன்பதாவது சென்னை உலக பட விழாவிற்கு எனக்கும் 'அலை'ப்'பூ' விடுத்துள்ளார் ஜெட்லி. 

--முதல் சென்னை என்றால் பெண்களூர் மார்க்கத்தில் எளிதாக  வந்துவிடுவேன்.  ஏழாவது சென்னைக்கு எப்படி வருவது என்று ஈமெயிலில் போன் செய்து கேட்டேன். நீ அங்கேயே இருடி ங்கோத்தா.  நான் கைபர் கணவாய் வழியா வந்து உன்னை கூட்டி போறேன்னு சொன்ன அவரோட பாசத்துக்கு முன்னால எவனுமே நிக்க முடியாது சாம்.  

-- இனியும் எங்க பப்லுவை எதிர்த்து அனானி, யுனானி மாதிரி ஆட்கள் கிளம்பினால் அவர்களை அடித்து விரட்ட என் பாய் ப்ரெண்ட்ஸ் பன்னி பண்டாரம், பூன மணி(ஜி), சாரப்பாம்பு, மாட்டு ரவி ஆகியோரை ஏவி விடுவேன் என உச்சரிக்கிறேன். 
-- தற்போது என் 'தொழிலை' முற்றிலுமாக 'துறந்து' விட்டு ஜெட்லிதாசி எனும் பெயர் மாற்றம் செய்துகொண்டேன். அவரின் முதல் பதிவான சமர்பணம் முதல் அன்மைப்பதிவான ஒன்பதாவது சென்னை பட விழா வரை அனைத்து பதிவுகளையும் தஞ்சாவூர் கல்வெட்டில் பதிய முனைப்புடன் வேலை செய்ய துவங்கி விட்டேன். 

-- அதுவரை 'இந்த மலைய உடச்சது எவன்டா. இந்த 'ஜெ'னா 'சே'னா நாலு நாள் ஊர்ல இல்லைங்கிற கொழுப்பா. கூப்புடுறா அந்த கலக்டரையும், தாசில்தாரையும்' என்று அலப்பறை செய்யாமல் இருக்குமாறு ஜெட்லியை உருகி மருகி கேட்டுக்கொள்கிறேன். 

இவள்,

ஜெட்லிதாசி 
1000, ஒம்*ல வீதி
அட்டிஸ் அபபா (http://en.wikipedia.org/wiki/Addis_Ababa)
எத்தியோப்பியா - 1000,1000,1000.



----------------------------------------------------------------------------------------------------

மன்னிக்கவும் ஜெட்லிதாசி.. எனக்கு திருமணம் ஆகிவிட்டது

விடை பெறுகிறான் சாம் மார்த்தாண்டன்



இதுவே சாம் மார்த்தாண்டனின் கடைசி பதிவு. சாம் மார்த்தாண்டன் பதிவுகளால் ஜெட்லி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி மெண்டலி மெண்டல் ஆகிவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெளியில் மீசையில் மண் ஒட்டாதவாறு நடந்து கொண்டு இரவு வீட்டில் பக்கெட் கணக்கில் குமுறிக் குமுறி அழுகின்றாராம். இவரால் கீழ்பாக்கம் ஏர்வாடி போன்ற இடங்கள் கெட்டுவிடக்கூடாது என்னும் நல்லெண்ணத்தில் பதிவுகள் நிறுத்தப்படுகின்றன. மற்ற வலைத்தளங்களில் வெளியிடப்படும் ஜெட்லி இடுகைகளுக்கும், சாமுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜெட்லிக்கு மன நிம்மதி கிடைக்க ஆண்டவனை பிரத்தித்து விடை பெறுவது உங்கள் சாம் மார்த்தாண்டன்.

ஆதரவளித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் சாம் மார்த்தாண்டனின் நெஞ்சார்ந்த  நன்றிகள்.


நனைப்பதல்ல நீ !!
துவைத்து காய போடுவதே நீ !!!




17 comments:

விழித்துக்கொள் said...

a beautiful tamil birthday song
http://vidhyasagar.com/

Anonymous said...

eluthaama vittudaathinga. matha pirabala pathivarai patri elunthunga raasaa.

வால்பையன் said...

good decision

Anonymous said...

109 தொடர்பவர்களை ஆப்பு வைப்பதற்காக ப்ளாக் இனி வராது என்ற அறிவிப்பா. ஜெட்லீ விட மோசமாக இருக்கிறதே.

Unknown said...

ஜெட்லி போதும். ஆனா, இந்த கருந்தேள் கண்ணாயிரம்னு ஒரு ஆள் எழுதிக்கினு கீறான் பாஸு.. அந்தாளையும் ஒரு காட்டு காட்டுங்களேன். கொசுத்தொல்லை தாங்க முடியலை . . .

கோச்சடையான் said...

போகாதே போகாதே எங்க சாமு... பொல்லாத சொப்பனம் நாங்க கண்டோம்! ... ஐயோ பொலம்ப விட்டுட்டையே ராசா !

Anonymous said...

மொக்கை பதிவர் சாம் மார்த்தாண்டனுக்கு ஒரு மடல்....
http://vadaibajji.blogspot.com/2012/01/blog-post_10.html

Anonymous said...

http://tamil.alisina.org/
அலி சினா in tamil

Anonymous said...

அருமையாக எழுதிவந்தீர்கள் சாம், ஏன் இந்த முடிவு?மறுபரிசீலனை செய்யவும்.அவ்வப்போதாவது எழுதலாமே?--திரு. நல்லரசு

Anonymous said...

தயவு செய்து மறு பரீசீலனை செய்யவும்

^ உங்கள் ரசிகன்

Anonymous said...

Seems to be a very bad new year resolution :-(

Anonymous said...

Man .. Keep writing , you have good creativity..
we need people like u....

Anonymous said...

Very sad new year resolution. Bad luck for us.

Anonymous said...

ஏற்றுக்கொள்ள முடியவில்லை சாம். உங்கள் முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள்.
ஒன்று மட்டும் உண்மை. உங்களின் இந்த அறிவிப்பு என்னைப் போன்ற ஏராளமான பதிவர்களை பாதிக்குமோ இல்லையோ, நிச்சயம் ஜெட்லியை பாதிக்கும்.
தேவை ஏற்பட்டால் உங்களுக்கு இரண்டாவது கடிதமும் எழுதுவேன் சாம்.
டிஸ்கி-1  : நீங்கள் தொடர்ந்து மொக்கை ப்ளாக்கில் எழுத வில்லை என்றால். உங்களுடைய ஒரிஜினல் தளத்தில் வந்து நான் கடுமையாக சண்டை போடுவேன் என்பதை இங்கே ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

டிஸ்கி - 2 :
டிஸ்கி 1ல்  ஒரு வார்த்தை மட்டும் மிஸ்ஸிங். அது என்னன்னு தேவை ஏற்பட்டால்
சொல்வேன்.

Dhans said...

I just found this blog thro' Tamilmanam and read most of the posts.. ROFL!! I too follow the original and this is செம spoof.. it is like "லொள்ளுசபா" comedy..

Anonymous said...

தானே புயல் தானே வந்து தானே சென்றிருக்கிறது. fishermen கள் அதிகமாக பாதிக்கப்படுவதாக தொடர்ந்து மீடியாக்கள் சொல்லி வருகின்றன. ஆனால் மீனவர்கள்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பது என் கருத்து.----------- மென் -னா பன்மை தானே அப்புறம் எதுக்கு கள் விகுதி..?


இப்போது தான் போன வருட புத்தாண்டுக்கு சரக்கடித்து விட்டு போலீஸிடம் பட்டக்ஸில் அடி வாங்கியது போல் இருக்கிறது. ------------------
மேல சொன்ன fishermen மீனவர் சங்கதி இங்கும் பொருந்தும்ல? புட்டத்துல அடி வாங்கினதுனா இயல்பா இருக்காதோ?

ஐயமுடைய ஐயாசாமி

Anonymous said...

Bdhdhuisksm nxnxhxnjmx,x,

Post a Comment

இங்கு கமண்ட் செய்பவர்கள் கண்டிப்பாக என் உலகப்படமான "பரசுராம் வயது 95" படத்தை பார்த்திருக்க வேண்டும். நன்றி