ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாசகர் கடிதங்கள் சிறந்த முறையில் எழுதிக்கொடுக்கப்படும். அணுகவும்.. சாம் மார்த்தாண்டன்/890000345589 மெயில்
5.1surroundsound@gmail.com.

Friday 6 July 2012

ஆண்வெஜ் பெண்வெஜ் /ராமாபுரம்/சென்னை/06/07/2012

ஆல்பம்:

திமுக சிறை நிரப்பும் போராட்டத்துக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே திமுக வினரை பயமுறுத்த ஆரம்பிக்க எனக்கு காலராவே வந்துவிட்டது. எனக்கு சிறை செல்லும் ஆசை இல்லாவிட்டாலும் அங்கு களி மிகவும் ருசியாக இருப்பதாகவும், காசுகூட வாங்வில்லை எனவும் சென்ற முறை அண்டா திருடிய வழக்கில் உள்ளே சென்று வந்த என் நண்பர் ஒருவர் கூறியதும் எனக்கு போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஆர்வம் அதிகமானது. சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து  கொண்டு கைது செய்யப்பட்டுவிட்டால் என்ன செய்வது? முன்கூட்டியே ஜாமீன் வாங்கி வைத்துவிடுவோம் என்று சைபர் கிரைம் ஆபீஸில் இருந்த என் நண்பரை அழைத்துக் கொண்டு மீன் மார்க்கெட்டுக்கு விடிய காலமே சென்றேன். இரவு எட்டு மணி வரை தேடியும் ஜாமீன் கிடைக்கவில்லை. வாழை மீன் இருக்குங்குறான், வஞ்சரமீன் இருக்குங்குறான் ஆன ஜாமீன் மட்டும் கடல்லயே இல்லையாம். வேறு வழியின்றி வீடு திரும்பி விட்டோம். நேற்று முன் தினம் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற என்னை ஏனோ போலீஸ்காரர்கள் கைது  செய்யவே இல்லை. நான் பிரபல பதிவர் என்பதால் பயந்து விட்டுவிட்டார்கள் என்று என் நண்பரிடம் சொல்லிக்கொண்டிருந்த நேரத்தில்  "போராட்டத்துல கலந்துக்குற மூஞ்சயும் மொகரக்கட்டையும் பாரு" என்று கூறிக்கொண்டே PC ஒருவர் பலத்த வேகத்துடன் லத்தியால் பட்டக்ஸில் இரண்டு வைத்தார் வலி தாங்கமுடியாமல் பின்புறம் தடவிக்கொண்டே மெல்ல வீடு வந்து சேர்ந்தேன். ஒத்தடம்  கொடுக்க வெண்ணீர் அடுப்பில் காய்ந்து கொண்டு இருக்கிறது.

-----------------------------------------------------------------------------------------------

அது என்னவென்றே தெரியவில்லை சொல்லிவைத்தார் போல எல்லா டீ கடைகளிலும் டீ குடித்த பின்பு காசு கேட்கின்றனர். உலக ஃபேமஸான ஒரு பதிவருக்கு  நீங்க கொடுக்கும் மரியாதை இதானாடே?

--------------------------------------------------------------------------------------------------

சென்னை அண்ணா மேம்பாலத்திலிருந்து பஸ் கவிழ்ந்ததற்கு காரணம் ஓட்டுனர் செல் பேசியில் பேசியது தான் என சொல்லுகிறார்கள்.. அப்படியே தான் பத்திரிக்கைகளிலும் சொல்லுகின்றனர். ஏன் பாடியிருந்தால் விழுந்திருக்காதா? ஆனால் பஸ்  மேம்பாலத்தில் மோதும் போது பாலம் உடைந்ததால் தான் கீழே விழுந்தது என்பது என் கருத்து. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஐடியா கொடுத்த ஐடியா மணியை இழுத்து நாலு  சாத்து சாத்த வேண்டும்.

----------------------------------------------------------------------------------------------------
மிக்சர்

ஓட போன் ரேட் ஏற்றிய விஷயம் எனக்கு தெரியாது. எப்போதும் ரேட் ஏற்றும் போது எனக்கு மறக்காமல் போன் செய்து சொல்லும் வோடபோன் ஓனர் இந்த முறை ஏனோ மறந்துவிட்டார். நேற்று வழக்கம் போல கடைக்கு சென்று 10 ரூபாய்க்கு ரீசார்ச்சும் 2 ரூபாய்க்கு ரேட் கட்டரும் போட சொன்னேன்.  கடைக்காரர் என்னுடைய  போனை தூக்கி வெளியில் வீசிவிட்டு செருப்பை எடுத்து காட்டினார். இவருக்கு இதே வேலையாக போய்விட்டது இனிமேலும் விடக்கூடாது என்று கஸ்டமர் கேருக்கு கால்செய்து விஷயத்தை கூறினேன். "Please check the number you have dialed" என்று கடைக்காரர் செய்த தவறுக்கு கஸ்டமர் கேரிலிருந்து மன்னிப்பு கேட்டார்கள்
---------------------------------------------------------------------------------------------------
அண்ணா மேம்பாலத்தை சரிசெய்து கொண்டிருந்தனர். நான் அந்த வழியே போகும் போது அங்கே வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் "...த்தா மேம்பாலம் கட்டிருக்கதாலதான பஸ் மேலருந்து கீழ விழுந்துச்சி... திரும்ப அதயே கட்டிகிட்டு இருக்கீங்க.. இடிச்சிட்டு பஸ் எல்லாத்தையும் கீழயே விடுங்கடா அப்பதான் ஆக்ஸிடண்ட் நடக்காது" என்று என் யோசனையை கூறினேன். பாலம் கட்ட வைத்திருந்த சிமெண்ட் கலவையை அள்ளி மூஞ்சில் அடித்து விட்டனர். வீட்டுக்கு வந்து அதை சுரண்டி எடுக்க மூண்று நாள் ஆனது.

------------------------------------------------------------
"dei unakku vekkame illaiyaa.. soru thingiriya illa vera ethayavathu thingiriya" என்று எனக்கு கடந்த ஜூன் 27 ம் தேதி சரியாக மாலை 3 மணி 30 நிமிடம் 20 நொடிக்கு ஒரு எஸ் எம் எஸ் வந்தது. நாய் முழுத்தேங்காயை உருட்டுவது போல அதை வத்து உருட்டிக்கொண்டிருந்தேன். எனக்கு தமிழே இப்பொழுதுதான் ஓரளவுக்கு படிக்கத் தெரிகிறது. அப்படியிருக்க எனக்கு தெலுங்கில்  எஸ் எம் எஸ் அனுப்பியிருந்தால் எப்படி புரியும்? நானும் எல்லோரிடமும் கேட்டுவிட்டேன் அனைவரும் "டேய் உனக்கு வெக்கமே இல்லையா? சோறு திங்கிறியா இல்ல வேற எதையாவது திங்கிறியா?" என்று ஒரே மாதிரியாக திட்டுகின்றனர். எஸ் எம் எஸ்ஸை காண்பித்தற்கே  இந்த திட்டு என்றால் அதில் அநேகமாக மிக மோசமான கெட்ட வார்த்தை எதாவது இருக்கும்னு நெனைக்கிறேன். த்தா.. யாராவது அதுக்கு அர்த்தம் என்னனு சொல்லுங்கடா...

---------------------------------------------------
இந்த வார வாசகர் கடிதம்:

میرے حساب کی طرف سے، ان کا احترام کرنے کے لئے درکار فنڈز کے اپنے اکاؤنٹ میں چیک اور آمد جمع کرنے کے درمیان تین گزر ضروری ہے. میں کورس کا حوالہ دیتے ہیں، میری معمولی بچت اکاؤنٹ، ایک انتظام کون سا، میں مانتا  صرف تیس ایک سال کے لئے جگہ میں کیا گیا ہے سے خود کار طریقے سے فنڈز کی ماہانہ کی منتقلی کرنے کے لئے،. آپ کی تعریف کرنے کے مواقع کی، اور اس کے علاوہ کسی بھی قسم کی تکلیف آپ کے بینک کی وجہ سے جرمانہ کی راہ کی طرف سے میرے اکاؤنٹ میں 30 ڈالر ڈیبٹ کے لئے یہ مختصر ونڈو پر قبضہ کے لئے ہو رہے ہیں.

خود کار طریقے سے فنڈز کی ماہانہ کی منتقلی کرنے کے لئے،. آپ کی تعریف کرنے کے مواقع کی، اور اس کے علاوہ کسی بھی قسم کی تکلیف آپ کے بینک کی وجہ سے جرمانہ کی راہ کی طرف سے میرے اکاؤنٹ میں 30 ڈالر ڈیبٹ کے لئے یہ مختصر ونڈو پر قبضہ کے لئے ہو رہے ہیں.






அன்பின் வாசகர்... மன்னிக்கவும் எனக்கு ஹிந்தி தெரியாது.

பிலாசபி பாண்டி:

லவ் பண்றதுங்கறது ஓடுற பஸ்ஸில் நின்று ஒண்ணுக்கு அடிப்பதை போல... பொறுமையா அடிச்சா ரோட்டுல அடிக்கலாம்.. அவசரப்பட்டு பரக்காவெட்டி மாதிரி அடிச்சா நம்ம மேலையே தான் அடிச்சிக்கனும். இப்படிக்கு பஸ் படிக்கட்டில் நின்று ஒண்ணுக்கு அடிக்கலாமா வேண்டாமா என யோசிப்போர் சங்கம்.  தம்பி கோச்சிக்கிறாதீங்க..
--------------------------------------------------------------------------------------
நாண்வெஜ் 18+ :
நேற்று முன் தினம் எனக்கும் பக்கத்து வீட்டு நாய்க்கும் யாருக்கு லெக் பீஸ் என்பதில் மிகப்பெரிய சண்டை வந்துவிட்டது. அது என் பட்டக்ஸை நோக்கி ஆவேசத்துடன் பாய்ந்து வந்த நேரம் "சேகர் செத்துருவான் ப்ரால்லயா... " என்று  முகத்தை விரைப்பாக வைத்துக்கொண்டு சொன்னேன். முகத்தில் காரிதுப்பிவிட்டு லெக்பீசை எனக்கே விட்டுச்சென்றது... '


பிரியங்காவுடன்..
சாம் மார்த்தாண்டன்  





நனைப்பது அல்ல நீ!!!

துவைத்து காயப்போடுவதே நீ!!!



EVER EVERS

6 comments:

Anonymous said...

Super!

Anonymous said...

Paragraph 2..... Kalakkal.....

Jai Jackie....

Anonymous said...

super super super.

Anonymous said...

சாம், கலக்கல். நன்றி.

கப்புகாத்து என ஊட்டியை பத்தி கப்சா வுட்டீங்களே, கபசா வுடனுனா பார்த்து வுடக்கூடாது.

ஊட்டியில் எந்த காலத்திலும் சென்னைக்கு செல்லும் அரசு பேருந்துவோ தனியார் பேருந்துவோ இரவு ஏழு மணிக்கோ அல்லது ஏழரை மணிக்கோ புறப்படுவது கிடையாது. எல்லா சென்னை வண்டிகளும் ஆறு மணிக்கே கிளம்பிவிடும்.

ஜெட்லீக்கு மட்டும், கப்ஸாவிற்காக வண்டி இரவு 10 மணிக்கு கிளம்பினாலும் கிளம்பலாம்.

Anonymous said...

ootha kalakita machan

Anonymous said...

யோவ் அது ஹிந்தி இல்லை உருது, மாசம் முப்பது டாலர் உங்க அக்கவுண்ட்ல போடுராங்கலாம், பேங்க் அக்கௌன்ட் குடுக்கனுமாம்

Post a Comment

இங்கு கமண்ட் செய்பவர்கள் கண்டிப்பாக என் உலகப்படமான "பரசுராம் வயது 95" படத்தை பார்த்திருக்க வேண்டும். நன்றி